குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற உதவும் தீபம்

By Yashini Apr 07, 2024 08:00 AM GMT
Report

பணம் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்திருக்க வேண்டும்.

குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற வீட்டில் இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்.

மணல் அகல் விளக்கு ஒன்றில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாக சேர்த்து திரித்து போடவும். 

குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற உதவும் தீபம் | Kula Deivam Deepam Worship  

இந்த மண் அகல் விளக்கை, கிழக்கு பக்கம் நோக்கி வீட்டு பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே தீபம் ஏற்ற வேண்டும்.

பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றுவது இன்னும் சிறந்தது. அல்லது காலை ஏழு மணிக்குள் ஏற்றவும்.

இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. 

ஈசனே பார்வதி தேவிக்கு கூறிய விரதத்தின் மகிமை

ஈசனே பார்வதி தேவிக்கு கூறிய விரதத்தின் மகிமை


நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம்.

முன்னோர்கள் காலகாலமாக வழிபட்டு வந்த குல தெய்வத்தை மறப்பது என்பது குடும்பத்திற்கு நல்லது அல்ல.      

குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற உதவும் தீபம் | Kula Deivam Deepam Worship

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US