அதிர்ஷ்டம் பெருக முதல் சம்பள பணத்தில் வாங்க வேண்டிய முக்கியமான பொருள்
By Sakthi Raj
ஆன்மீகம் என்பது வாழ்க்கை முறை.நம்மை சந்தோஷமாக வாழ வழி வகுக்கும் ஒரு முக்கிய கருவி என்றே சொல்லலாம்.அப்படியாக நாம் இறைவன் மீது குழந்தை மனதோடு எவ்வாறு பக்தி செலுத்தினாலும் ஏற்று கொள்வார்.
இருந்தாலும் முறையான சாஸ்திரங்கள் தெரிந்து நாம் வழிபாடு செய்யும் பொழுது அதற்கான பலன் நூறு மடங்கு அதிகம்.நாம் இப்பொழுது பின்பற்ற வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

- நாம் இறை வழிபாடு முடிந்த பிறகு வேண்டுதல் நிறைவேற பிரதட்சணம் செய்வது உண்டு.அப்பொழுது ஆண் தெய்வங்களை ஒற்றைப்படையிலும்,பெண் தெய்வங்களை இரட்டை படையிலும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
- நமக்கு காரிய தடங்கல்,எதை செய்தலும் தோல்வி,வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமை போன்ற விஷயங்களை அன்றாட சந்திப்பது உண்டு.அப்பொழுது நாம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அன்பாக பேசி,அவர்களை கவனித்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றாலே அனைத்திலும் சிறந்து விளங்கலாம்.
- எல்லோருக்கும் முதல் பிறந்த நாள்,முதல் சந்திப்பு போன்ற முதலில் செய்ய கூடிய அல்லது கிடைக்குடிய விஷயங்கள் எப்பொழுதும் ஒரு வகையான ஆனந்தம் கொடுக்கும்.அப்படியாக படித்து முடித்து வேலைக்கு சென்று வாங்கும் முதல் சம்பள பணம் மிகவும் விஷேசமானது.வாங்கிய முதல் சம்பள பணம் மென்மேலும் பெருகி நல்ல நிலைக்கு வருவதற்கு முதலில் பால்,அரிசி,பூக்கள்,உப்பு,போன்ற விஷயங்கள் வாங்குவதால் செல்வம் பெருகி நிலையான வேலை கிடைக்கும்.
- சிலர் கோபத்தில் கையில் எது கிடைத்தாலும் தூக்கி எரியும் பழக்கம் வைத்திருப்பார்கள்.ஆனால் ஒரு பொழுதும் காய்கறிகள் பழங்கள் போன்றவை காலால் மிதிப்பதும்,தூக்கி வீசுவதும் செய்தால் நமக்கு பாவம் சேரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US