மஹாலக்ஷ்மி வீட்டில் தங்கி பணமழையில் நனைய திருப்புகழ்
By Sakthi Raj
வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது.அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம்.அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு.
நல்ல உணவிற்கு கையில் பணம்.இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும்.அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும்.
நம் கையில் தங்க கடவுளின் இறை அருள்.அப்படியாக இறை அருள் பெற்று மஹாலக்ஷ்மி நம் மனதிலும் வீட்டிலும் தங்க கீழ்க்கான திருப்புகழ் பாட மஹாலக்ஷ்மி தேடி வருவாள்.
இப்பாடலை சோலை மலை முருகன் மீது அருணகிரிநாதர் இயற்றியுள்ள பாடல்.
அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ எனது முனோடி வரவேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூறும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US