மார்கழியில் திருமணம் செய்யலாமா? சுப காரியங்களை தவிர்ப்பது ஏன்?

By Sumathi Dec 17, 2025 01:34 PM GMT
Report

மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

மார்கழி

இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம். சுப காரியங்களை தவிர்த்து, இறைவனின் அருளை பெறுவதற்குரிய வழிபாடுகள், மந்திர ஜபம், சங்கீத நாம கீர்த்தனைகள் பாராயணம் போன்ற ஆன்மீக விஷயங்களை கவனத்தை செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

மார்கழியில் திருமணம் செய்யலாமா? சுப காரியங்களை தவிர்ப்பது ஏன்? | Marriage House Warming Avoid Margazhi Reason

மார்கழி மாதத்தில் சூரியனின் தேரை இழுக்கும் குதிரைகள் சோர்வடைந்து, அவற்றின் வேகம் குறைந்து விடுவதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த காலம் இறைவழிபாடு, தானம் செய்தல், விரதம் கடைபிடித்தல் போன்ற சுபஒழுக்க மற்றும் கட்டுப்பாட்டு விஷயங்களில் ஈடுபடுவதற்கான மாதமாக கருதப்படுகிறது.

செய்யக்கூடாதவை

இதனால் தான், புதிய பொருட்களை வாங்குவது, நிச்சயதார்த்தம் மற்றும் பிற முக்கிய கொண்டாட்டங்கள் மார்கழி மாதத்தில் செய்யப்படுவதில்லை. திருமண மாலை, முகூர்த்தம் போன்ற முக்கிய திருமண சுப காரியங்களை பெரும்பாலும் தவிர்ப்பது மரபு.

இறந்தாலும் உலகில் அடையாளத்தை விட்டுச் செல்லும் ராசிகள் - எதெல்லாம் தெரியுமா?

இறந்தாலும் உலகில் அடையாளத்தை விட்டுச் செல்லும் ராசிகள் - எதெல்லாம் தெரியுமா?

காது குத்துதல் போன்ற பிற சடங்குகளையும் சில குடும்ப மரபுகள் தவிர்ப்பதுண்டு. புதிய சிலை பிரதிஷ்டை, கோவில் கும்பாபிஷேகம் போன்ற பெரிய மத சடங்குகளும் நிர்ணயிக்கப்படுவதில்லை.

புதிய தொழில் தொடங்குவதையோ அல்லது புதிய வணிக நிறுவனத்தை திறப்பதையோ இந்த மாதத்தில் தவிர்க்க வேண்டும். 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US