தமிழ் மாதங்களில் நாம் செய்யவேண்டிய தானம்
தானம் இதை மனதார செய்வதாலே பாதி பாவங்கள் கரைந்து விடும்,அதாவது நாம் தெரிந்தும் தெரியாமலோ பல பாவங்கள் செய்திருக்கலாம்,அப்படியாக அந்த பாவங்கள் கண்டிப்பாக நம்மை சுற்றி சுற்றி வரும்.
பல இன்னல்களை தரும்.யாராக இருந்தாலும் செய்த பாவத்தில் இருந்து தப்பிக்க முடியாது.இருந்தாலும் அந்த பாவங்களுடைய கர்ம வினைகளை குறைக்க நாம் சில புண்ணியங்களை செய்யலாம்.
அப்படியாக தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனைச் செய்தால் வாழ்வில் சுபயோகம் வந்து சேரும்.
சித்திரை - நீர்மோர்,விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்
வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி - தேன்
ஆடி - வெண்ணெய்
ஆவணி - தயிர்
புரட்டாசி - சர்க்கரை
ஐப்பசி - உணவு, ஆடை
கார்த்திகை - பால், விளக்கு
மார்கழி - பொங்கல்
தை - தயிர்
மாசி - நெய்
பங்குனி - தேங்காய்
இதே போல, 7 நாட்களுக்கும் கூட தானம் இருக்கிறது.
ஞாயிறு - பொங்கல்,பாயாசம்
திங்கள் - பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் - வெண்ணெய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி - கல்கண்டு
சனி - நெய்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |