இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண் கணவராக கிடைத்தால் அந்த பெண் கொடுத்துவைத்தவராம்
ஜோதிடத்தில் எண் கணிதமும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, என் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில மாதத்தில் பிறந்த ஆண்களை ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அந்த பெண் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். அவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம்.
மார்ச்:
ஒருவர் மார்ச் மாதத்தில் பிறந்தவராக இருந்தால் அவர்கள் அதீத காதல் பற்று கொண்டவர்களாகவும் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்களாம். அதுமட்டுமல்லாமல் அவர்கள் உறவில் உறுதியாகவும் ஒரு உறவில் அவர்கள் நுழைந்து விட்டால் அதில் ஆழமாக இறங்கி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால் தங்களுடைய துணைக்கு தேவையானதை தேடி செய்யக்கூடியவர்களாம்.

ஜூலை:
ஜூலை மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்களுடன் சிறிது காலம் பழகினாலே அந்த நபருக்கு தேவையான எல்லா விஷயங்களும் செய்து கொடுப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் அன்பும் எண்ணமும் மிகவும் தூய்மையாக இருக்கும். ஒருவர் இவரை நம்பிவிட்டால் அந்த நபருக்காக இவர்களை எதையும் செய்யத் துணிவார்கள். இவர்களுடைய மனைவிக்கு இவர்கள் எதையும் செய்ய துணிந்தவர்களாக இருக்கிறார்கள்.
அக்டோபர்:
ஒருவர் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களாக இருந்தால் அவர்கள் காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒரு விஷயத்தை நேர்மறையாக அணுகக் கூடிய தன்மை கொண்டவராகவும் இருக்கிறார். கொடுத்த வாக்கை இவர்கள் காப்பாற்ற கூடியவராகவும் திகழ்கிறார்கள். அதேபோல் இன்பம் துன்பம் எதுவாக இருந்தாலும் மனைவியை கைவிடாமல் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |