திங்கள்கிழமையில் பிறந்தவங்க எப்படியிருப்பாருங்க தெரியுமா?
திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் எவ்வாறான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பிறந்த கிழமை
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதம் இவைகள் பெரிதாக பார்க்கப்படுகின்றது. இவை இரண்டினை வைத்து வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு, அதிர்ஷ்டத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒருவரின் ராசியினை வைத்து அவரது ஜாதகத்தை கூறிவிட முடியுமாம். அதே போன்று ஒருவரின் பிறந்த தேதியையும் வைத்து அவரது ஆளுமையை பற்றி அறியலாம்.
தற்போது திங்கள்கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை எப்படியிருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
திங்கட்கிழமை பிறந்தவர்கள்
திங்கள்கிழமையில் பிறந்தவர்கள் கவர்ச்சிகரமான ஆளுமையை உடையவர்களாக இருப்பார்கள்.
அனைவரிடமும் அதிக மகிழ்ச்சியாகவும், நட்பாகவும் பழகும் இவர்கள் மென்மையான இதயம் உடையவராகவும் இருப்பார்கள்.
மற்றவர்களை ஒருபோதும் காயப்படுத்த விரும்பாத இவர்கள், முடிந்தவரை பிறருக்கு உதவ எப்பொழுதும் தயாராகவே இருப்பார்கள்.
இயல்பாகவே அமைதி குணம் உடையவர்கள் என்பதால் கோபப்பட்டாலும் சிறிது நேரத்திற்கு பிறகு அதுவும் குறைந்து விடும்.
பிரச்சனை என்ன?
திங்கள்கிழமை பிறந்தவர்கள் மனம் அமைதியற்றதாக இருப்பதால், வேலையில் முழு மனதுடன் கவனம் செலுத்த முடியாமல் போகும்.
பல தருணங்களில் அவசரமாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தவறான முடிவுகளை எடுப்பார்கள். சற்று யோசித்தால் நல்ல முடிவுகளை எடுக்க முடியுமாம்.
இவர்கள் எடுக்கும் அவசர முடிவினால் வருத்தப்படவும் செய்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |