நோய் தீர்க்கும் அற்புதமான முருகப்பெருமானின் திருப்புகழ்

By Sakthi Raj Jul 11, 2025 11:24 AM GMT
Report

கலியுக வரதன் முருகப்பெருமான் அவன் பக்தர்கள் துயர் தீர்க்கும் அற்புத சக்தி படைத்தவர். இவரிடம் சென்று முறையிட வந்த பிரச்சனைகள் எல்லாம் திசை தெரியாமல் சென்று விடும். ஆனால், இவரை வழிபாடு செய்யும் பொழுது நாம் முழுமனத்தோடும் நம்பிக்கையோடும் வழிபாடு செய்யவேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது நம் வேண்டுதல்களுக்கும் பக்திக்கும் நல்ல பதில் கிடைக்கும். மேலும், முருகப்பெருமான் வழிபாட்டில் மிகவும் சக்தி வாய்ந்ததாக அவரின் திருப்புகழ் இருக்கிறது. மனிதர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு ஏற்ப முருகப்பெருமானின் திருப்புகழை எடுத்து பாராயணம் செய்து வர நமக்கு நல்ல விடைக்கிடைக்கும்.

அப்படியாக, திடீர் என்று நம்மை வாட்டி வதைக்கும் நோயால் அவதிப் படும் பொழுது நாம் சொல்ல வேண்டிய முருகப்பெருமானின் திருப்புகழ் பற்றி பார்ப்போம்.

நோய் தீர்க்கும் அற்புதமான முருகப்பெருமானின் திருப்புகழ் | Murugaperuman Tirupugazh Worship

இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசிவிடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.

தவறான நபரை காதலித்து ஏமாறும் 4 ராசிகள் யார் தெரியுமா?

தவறான நபரை காதலித்து ஏமாறும் 4 ராசிகள் யார் தெரியுமா?

இந்த திருப்புகழை எவர் ஒருவர் இருமல், ரோகம், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், எரிக்கும் தன்மையுடைய நாசி , நீரிழிவு , விடாத தலைவலி, இரத்த சோகை, எழுகளமாலை என்னும் கழுத்தைச் சுற்றி உண்டாகும் புண்கள், நெஞ்சு எரிச்சல், சூலை நோய் என்னும் கொடிய வயிற்றுவலி, பலவிதக் காரணங்களால் உடம்பில் உண்டாகும் வலிகள், மற்றும் பல்வேறு நோய்களால் அவதிப்படும் பொழுது அவர்கள் முருகப்பெருமானின் இந்த திருப்புகழை பாராயணம் செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US