இந்த தேதியில் பிறந்த ஆண்கள் மனைவியை தேவதை போல் பார்த்து கொள்வார்களாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் திருமண வாழ்க்கை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதில் தனக்கு துணை எப்படி எல்லாம் அமையவேண்டும் என்று எல்லோரும் ஒரு வித கருத்துக்களும், கனவுகளும் இருக்கும். அதில் ஆசைகளை தாண்டி ஒருவரை ஒருவர் எவ்வாறு பார்த்து கொள்கிறார்கள் என்பது பொறுத்து தான் உறவு பலப்படுகிறது.
அந்த வகையில், குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த ஆண்கள் அவர்களின் மனைவியை தேவதை போல் பார்த்து கொள்வார்களாம். அதாவது நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் எண் கணிதத்திற்கு மிக பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.
ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை திறன் மற்றும் எதிர்காலத்தை ஓரளவு நாம் கணித்து விட முடியும். அப்படியாக, எண் கணித்தபடி கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்களது மனைவியை மிகவும் அதிகமாக நேசிப்பார்களாம்.
எண் 2:
அதாவது, இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் அவர்களின் மனைவியை மிகவும் அளவுகடந்து நேசிப்பார்களாம். இவர்கள் எந்த வகையிலும் அவர்களின் மனைவியை ஏமாற்ற மாட்டார்களாம். ஆக 12 மாதத்திலும் எண், 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகள் அனைத்தும் எண் 2இன் கீழ் வரும்.
இவர்கள் அனைவரின் மனைவியும் மிக பெரிய அதிர்ஷ்டசாலிகளாவே கருதப்படுகிறார்கள். இந்த எண் 2ல் பிறந்த ஆண்கள் மிகவும் நேர்மையான மற்றும் ஒழுக்கம் கொண்ட மனிதராக இருப்பார்கள். எப்பொழுதும் மனசாட்சிக்கு மீறிய விஷயங்களில் ஈடுபடமாட்டார்கள்.
எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதை தைரியமாக சமாளிப்பார்கள். அதிக அளவில் இறைநம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் குடும்பத்திற்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அதே போல் இவர்களை நம்பி தாராளமாக எந்த ஒரு செயலையும் நாம் செய்யலாம். மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். ஆதலால் இந்த தேதியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |