அனைத்து செல்வமும் தரும் ஒரு வரி மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வரும்.அதில் இருந்த விடுபட நமக்கே ஒரே வழி கடவுள் தான்.எத்தனை துன்பம் வந்தாலும் நம்மை காப்பது இறை அருள் மட்டும் தான்.
அப்படியாக கடவுள் வழி படும்பொழுது அவர்களுக்கான மந்திரங்கள் சொல்லி வழி பட கூடுதல் பலன் கிடைக்கும்.ஆனால் பலரும் மந்திரங்களை மனதில் வைத்து கொள்ள முடிவது இல்லை.
அவர்கள் அனைவரும் சுலபமான முறையில் மந்திரங்கள் நினைவில் வைத்து கொள்ள ஒரு வரி மந்திரம்
“சுகம் சௌபாக்கியம் தேஹி தேஹி”
இந்த ஒரு வரி மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 21 முறையாவது கூற வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் கூறலாம்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டுவேனாலும் கூறலாம்.
எந்த அளவிற்கு இந்த மந்திரத்தை நாம் கூறிக் கொண்டே இருக்கிறோமோ அந்த அளவிற்கு இந்த பிரபஞ்சமானது நமக்கு சகல சௌபாக்கியத்தையும் தந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மந்திர சொற்களை தினமும் நாம் பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |