வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியேற இதை மட்டும் செய்யுங்கள்

By Yashini Aug 11, 2024 02:30 PM GMT
Report

மகாலட்சுமியின் அனுகிரகம் இருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

தங்க ஆபரணங்கள், மன நிம்மதி, மன மகிழ்ச்சி, வளர்ச்சி, குழந்தை செல்வம் உள்ளிட்ட அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.

மகாலட்சுமியின் அருள் எப்போதும் நம்முடைய வீட்டில் நிறைந்திருந்த வீட்டில் சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும். 

வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியேற இதை மட்டும் செய்யுங்கள் | Parigaram For Attracting Goddess Lakshmi Blessings

செய்யவேண்டிய பரிகாரம்

வெள்ளிக்கிழமை அன்று காலையில் மருதாணி இலைகளை பறித்து, நன்கு அரைத்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் வைத்த விட வேண்டும்.

இந்த மருதாணிக்கு அருகில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அந்த மருதாணி நாள் முழுவதும் அப்படியே இருக்க வேண்டும்

மாலைக்கு பிறகு பூஜை அறையில் இருக்கும் மருதாணியை எடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் கைகளில் வைத்துக் கொள்ளலாம்.

வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியேற இதை மட்டும் செய்யுங்கள் | Parigaram For Attracting Goddess Lakshmi Blessings

முதல் வாரம் வீட்டில் உள்ளவர்கள் வைத்துக் கொண்டால், அடுத்த வாரம் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் உள்ள பெண்களுக்கு, சுமங்கலி பெண்களுக்கு அந்த மருதாணியை கொடுங்கள்.

மருதாணியை வீட்டில் பூஜை செய்து, அதை சுமங்கலிகளுக்கு தானமாக கொடுப்பது மகாலட்சுமிக்கே மருதாணி கொடுப்பதற்கு சமம்.

வீட்டில் உள்ள பெண்கள் மருதாணியை கையில் வைத்து விளக்கேற்றும் போதும், சமையல் செய்யும் போதும் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்.

அதேபோல் மருதாணி பூக்களையும் பூஜையறையில் வைத்து வழிபடுவது மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


  

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US