மங்காத செல்வம் கிடைக்க ஒரு முறை இவரை தரிசித்து வாருங்கள்

By Sakthi Raj Aug 05, 2024 05:30 AM GMT
Report

பெருமாளை வழிபடுபவர்களுக்கு சக்கரத்தாழ்வார் பற்றி தெரிந்து இருக்கும்.அதாவது உலகில் நாடாகும் தீமைகளை அழிக்கப் பிறப்பெடுத்த சக்கரத்தாழ்வார்,ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர்.

அவரை ஆடி மாத சித்திரை நட்சத்திர நன்னாளில் மனதார வழிபட மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்.

அதாவது சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜெயந்தித் திருநாள்.

மங்காத செல்வம் கிடைக்க ஒரு முறை இவரை தரிசித்து வாருங்கள் | Perumal Sakrathalavar Sri Rangam Valipadu

மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் நாம் எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாரு க்கு தனிச்சந்நிதி அமைந்து இருப்பதை பார்க்கமுடியும்.

கர்ம வினைகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

கர்ம வினைகளில் இருந்து தப்பிப்பது எப்படி?


ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது போல சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.

நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US