மகர விளக்கு பூஜை.., சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு

By Yashini Dec 29, 2025 06:37 AM GMT
Report

ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் மட்டும் நடை திறக்கப்படுகிறது.

இதை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

மகர விளக்கு பூஜை.., சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு | Sabarimala Temple Opening Tomorrow

இதையடுத்து மறுநாள் 31ஆம் திகதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

அடுத்த மாதம் ஜனவரி 14ஆம் திகதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும். சீசனையொட்டி 19ஆம் திகதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

      

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US