சங்கடங்கள் தீர வீட்டில் இந்த ஒரு பூ இருந்தால் போதும்

By Sakthi Raj Oct 13, 2024 11:41 AM GMT
Report

வீடு என்றால் அதில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.குடும்ப பிரச்சனையில் ஆரம்பித்து பண கஷ்டம் வரை நாம் சந்திக்க நேரிடும்.அப்படியாக அந்த கஷ்டங்கள் தாக்கம் குறைய நிறைய வழிமுறைகள் ஆன்மீகத்தில் சொல்ல பட்டு இருக்கிறது.

அந்த வகையில் வீட்டில் உள்ள துன்பம் படி படியாக விலக சங்கு பூ வளர்த்தால் நல்ல மாற்றம் வரும் என்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம்.

சங்கடங்கள் தீர வீட்டில் இந்த ஒரு பூ இருந்தால் போதும் | Sangu Poo Parigaram Palangal

இந்த சங்கு பூ விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிடித்த பூவாக சொல்லப்படுகிறது.எனவே இந்த பூ வீட்டில் இருக்க மஹாலக்ஷ்மியின் அருளையும் நாம் பெறமுடியும்.இந்த பூக்கள் கொண்டு நாம் பெருமாளுக்கு சாத்தி வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் படி படியாக குறைகிறது.

நந்தியின் வாயிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம்

நந்தியின் வாயிலிருந்து இரத்தம் வழியும் அதிசயம்


நீலம் தவிர, இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களிலும் இந்த பூக்கள் உண்டு. அடுத்தபடியாக சனி தோஷம் இருப்பவர்களும் இந்த சங்குப் பூங்கொடியை வீட்டில் வளர்த்து, அந்த பூக்களை சனி பகவானுக்கு பூஜை செய்ய சனியின் பாதிப்பு குறையும் என்று நம்பப்படுகிறது.

சங்கடங்கள் தீர வீட்டில் இந்த ஒரு பூ இருந்தால் போதும் | Sangu Poo Parigaram Palangal

இந்த பூக்கள் வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகிறது. மேலும் 5 சங்கு மலர்களை தண்ணீரில் போட்டு குளிப்பதால், இதுநாள்வரை தடைபட்ட அனைத்து காரியங்களும் எளிதில் கைகூடும்.

இந்த பூக்களை நம்முடைய வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.அதேபோல, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் 7 சங்கு பூக்களை போட்டு, வடகிழக்கு மூலையில் வைத்துவிட கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரித்து குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

ஆதலால் இந்த நீல சங்குப்பூ கொடியை, வீட்டில் வடக்கு திசையில் நட்டு வைக்க வேண்டும்.இதனால் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் எல்லாம் தடைகள் இல்லாமல் நடக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US