இந்த அம்மனை மனதார நினைத்தாலே நாகதோஷம் விலகும்

Parigarangal Durgai Amman
By Sakthi Raj Apr 30, 2024 06:28 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

எந்த செயலை தொடங்கினாலும் நாகதோஷத்தால் தடைகள் ஏற்படுகிறது என்று வருத்தப்படுபவர்களா நீங்கள்.?

அப்படியானால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்மனை சரணடையுங்கள்."கோமதி"என்று ஒருமுறை அழைத்தாலே போதும் குறைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.

மேலும் இத்தலத்தில் சங்கன்,பதுமன் என்னும் நாக அரசர்கள் வழிபட்டு சங்கரநாராயணனை தரிசிக்கும் பேரு பெற்றனர்.

இந்த அம்மனை மனதார நினைத்தாலே நாகதோஷம் விலகும் | Sankarankovil Gomathiamman Nagathosham Parigaram

தூய சிந்தனையுடன் இருப்பிடத்திலிருந்து இக்கோயிலை மனதால் நினைத்தாலும் நாக தோஷம் மறைந்துவிடும்.அத்தனை சக்தி வாய்ந்த கோயில்.

இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊற்றுமலை ஜமீன் இடம் புலவராக இருந்தவர் புளியங்குடி முத்துவீரப்ப கவிராயர்.

சுப நிகழிச்சி நடத்த பூக்கட்டி உத்தரவு வாங்கும் மக்கள்-விஷேச அம்மன் கோயில்

சுப நிகழிச்சி நடத்த பூக்கட்டி உத்தரவு வாங்கும் மக்கள்-விஷேச அம்மன் கோயில்


சீவல மாற பாண்டியன் எனும் மன்னரால் இயற்றப்பட்டு முழுமை பெறாமல் இருந்த கோவில் புராணத்தை கவிராயரே பாடி முடித்தார்.

மேலும் கோமதி அம்மனை தரிசித்த பின் எந்த மனிதரையும் பார்க்க மாட்டேன் என வரம் பெற்றார். இதனால் இமைகள் வேகமாக வளர இவரது கண்கள் மூடிக்கொண்டன.

இவர் இயற்றிய கோமதி அம்பிகை பிள்ளைத்தமிழ் பாடலை பாடினால் விருப்பங்கள் நிறைவேறும்.மேலும் நாக தோஷம் விலகும்.

இந்த அம்மனை மனதார நினைத்தாலே நாகதோஷம் விலகும் | Sankarankovil Gomathiamman Nagathosham Parigaram

தேனே வருக சீராசைத்
திருவே வருகதிரிநேத்திர
சிவசங்கரருக்கு உவகை நல்கும்
செல்வ கனியே வருக விண்ணின்
ஆனே பரவத் தவம் புரியும்
அமுதே வருக குமுதவாய்
அனமே வருக வினைஇருளை
அவிக்கும் கிரணக் கதிர் வருக
பால் நேர் மொழி பார்வதி வருக
பனி மாமலையின் சேய் வருக
பன்னாகங்கள் இரண்டும் வழிபாடு
புரியும் புன்னை வன
மானே வருக உயிர் அனைத்தும்
வளர்க்கும் அனையே வருகவே
மன்றல் கமலு மலர்க் குழல்
கோமதியே வருக வருகவே!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US