குபேரன் அருளை பெறுவது எப்படி?
நம் வாழ்க்கையில் என்னதான் முயற்சி செய்த்தாலும் தூய்மையான மனமும் கடவுள் பக்தியும் இருந்தால் மட்டுமே எல்லாம் சத்தியம் ஆகும்.
அப்படியாக உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவருமே மிக பெரிய செல்வந்தர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும்.
செல்வத்திற்கு அதிபதி குபேரன்.ஏன் உலகில் மிகவும் செல்வம் நிறைந்த திருப்பதி ஏழுமலையான் கூட தன்னுடைய திருமணத்திற்காக குபேரரிடம் இருந்துதான் கடன் வாங்கினார் என்று புராணங்கள் இருக்கிறது.
அப்படி பட்ட பெரும் செல்வத்துக்கே அதிபதியான குபேரரை வணங்க நமக்கு அவரின் ஆசி வேண்டும்.மேலும் குபேரனின் அருளை பெற குபேரன் ஒரு வரி மந்திரம் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
மிகவும் எளிமையான மந்திரமாக இருந்தாலும்,இந்த மந்திரத்தை சொல்ல ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.அதாவது விடியற்காலை மூன்று மணிக்கு இந்த மந்திரத்தை 108 முறை 48 நாட்களுக்கு சொல்ல நம் மனதில் நினைத்த காரியம் கண்டிப்பாக நடைபெறும்.
மேலும் மந்திரத்தை நம் மனதிற்குள்ளே சொல்லவேண்டும்.
மந்திரம்
"ஓம் ஹ்ரீம் ஓம் குபேராய நமஹ''
இந்த மந்திரத்தை மறக்காமல் மூன்று மணிக்கு சொல்லும்பொழுது தான் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.தீராத கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |