உங்கள் வீடுகளில் குலதெய்வம் இருப்பதற்கான முக்கியமான அறிகுறிகள் என்ன?
குலதெய்வம் என்பது எல்லோர் வீட்டிற்கும் அவ்வளவு எளிதாக வந்து விடுவதில்லை. நாம் ஒரு சரியான ஆன்மீக வழிபாட்டையும் அவர் மீது ஒரு நல்ல பற்றையும் வைத்திருக்கின்ற பொழுது தான் குலதெய்வம் நம்மை தேடி நம் வீடுகளில் வந்து தங்கி நமக்கு அருள் வழங்குகிறார்கள்.
அந்த வகையில், குலதெய்வத்தினுடைய அருள் நம் வீடுகளில் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளை பற்றி பார்ப்போம். குலதெய்வம் அருள் இருந்தால் பசு தானாக நம்முடைய வீட்டிற்கு வந்து நிற்பதை பார்க்க முடியும்.
அதேபோல், பறவைகள் வீட்டில் நம் வீட்டில் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் கூடுகட்டும். வீடுகளில் திடீரென நல்ல மணம் வீசுவதை நம்மால் உணர முடியும். பூஜை அறையில் தீபம் மிகப் பிரகாசமாக எரியும்.

அதைப்போல் கனவுகளில் கோவில் இறைவனை போன்றவற்றை நாம் காணலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு விநாயகர் மட்டும் மற்றும் யானை தொடர்பான கனவுகள் அடிக்கடி வருவதுண்டு. அதேபோல், வீடுகளில் துளசி செடி நன்கு செழித்து வளரும்.
வண்ணத்துப் பூச்சியும் அடிக்கடி வீட்டிற்குள் வருவதை நாம் காணலாம். மனதில் எப்பொழுதும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் குலதெய்வத்தை மனதால் நினைத்தால் அவரை அருகில் உணரக்கூடிய தன்மையும் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |