ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம்?
கோயிலுக்கு சென்றுவிட்டு பலரும் அங்கு விற்கும் பொருட்களை வாங்கி வருவோம், அதில் முக்கியமானது மாலைகள்.
ஸ்படிக மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இந்த பதிவில் ஸ்படிக மாலையை யாரெல்லாம் அணியலாம்? இதை அணிவதால் உண்டாகும் பலன்கள்? என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ஸ்படிகம் என்பது ஒருவகை பாறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மண்ணுக்கு அடியில் பாறையில் இருந்து பெறப்படுவது ஸ்படிகம்.
இதை அணிவதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் என கூறப்படுகிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை இதற்கு உண்டாம்.
அதிகம் கோபப்படும் நபர்கள் ஸ்படிக மாலையை அணியலாம், குழந்தைகள் பெரியவர்கள் என ஸ்படிக மாலையை அணிந்து கொள்ளலாம்.
குளிர்பிரதேசத்தில் இருப்பர்கள், இயற்கையாகவே உடல் குளிர்ச்சி தன்மையுடன் இருப்பவர்கள் இதனை அணியக்கூடாது.
இதனை அணிவதற்கு முன்பாக சுமார் 3 மணிநேரம் தண்ணீர் ஊறவைத்து பின்னர் பயன்படுத்தவும், எந்த காரணம் கொண்டும் வேறு ஒருவரின் மாலையை அணிய வேண்டாம்.
தெய்வீக சக்தி கொண்டது ஸ்படிக மாலை, சிவன், நந்தி, விநாயகரின் சிலைகள் கூட ஸ்படிகத்தில் கிடைக்கின்றன.
இவற்றை வாங்கி வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தாலும் பலன்களை பெறலாம்.
தங்கம் மற்றும் வெள்ளியுடன் சேர்த்து ஸ்படிக மாலையை அணிந்து கொள்ளலாம், ருத்ராட்சத்துடன் இதனை சேர்க்க கூடாது.