ஆன்மீகம்: தவறியும் இந்த நாட்களில் இதை செய்யாதீர்கள்.. இழப்பு நிச்சயம்
நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஆன்மீக சார்ந்து சில முக்கியமான விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டிய நிலை வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாட்களில் நாம் முக்கியமான விஷயங்களை தவறியும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அந்த வகையில் எந்த தினங்களில் நாம் என்ன விஷயம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. நாம் ஒரு பொழுதும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரும்பு சார்ந்த பொருட்களை வாங்க கூடாது. அவ்வாறு வாங்கும் பொழுது வீட்டின் உடைய அமைதியை கெடுக்கும்.
2. ஒரு பொழுதும் நாம் திங்கட்கிழமை அன்று ஒருவரிடம் தூக்கம் விசாரிக்க கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது சில பின் விளைவுகள் உருவாகும்.

3. பெண்கள் ஒரு பொழுதும் செவ்வாய்க்கிழமை அன்று நகையை கழட்டுவதோ அல்லது சுத்தம் செய்வதும் கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் சில பொருளாதார இழப்புகள் உண்டாகும்.
4. புதன் கிழமை அன்று கண் சிகிச்சை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நமக்கு கூடுதலாக சில பாதிப்புகள் வரலாம்.
5. ஒருபொழுதும் வியாழக்கிழமை அன்று பித்ரு தொடர்பான விஷயங்களை செய்யக்கூடாது. மீறி செய்யும் பொழுது குலதெய்வம் சாபம் உண்டாகும்.
6. ஒரு பொழுதும் வெள்ளிக்கிழமை அன்று கண் திருஷ்டி சுற்றி போடாதீர்கள். வெள்ளிக்கிழமை அன்று கண் திருஷ்டி சுத்தி போடுவதால் வீட்டில் இருக்கக் கூடிய மகாலட்சுமி விலகி செல்கிறார்.
7. முடிந்த அளவு சனிக்கிழமை அன்று கடன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள். மீறி வாங்கும் பொழுது கடன் பெருகி நமக்கு ஒரு சில தரித்திரத்தை உண்டாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |