சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்... இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையிரல் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ராசி பலன் கணிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது.
அந்தவகையில், அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக திகழும் சூரிய பகவான், ராஜ குருவாக அறியப்படும் குரு பகவான் ஆகிய முக்கிய கிரகங்களின் சேர்க்கை, ஜூன் 19 ஆம் திகதி நிகழவுள்ளது.

குறித்த இரண்டு ஆற்றல் வாய்ந்த கிரகங்களின் சேர்க்கையால், துவித்வாதச யோகம் உருவாகின்றது. இந்த யோகமானது அனைத்து ராசிக்காரர்களும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்த 3 ராசியினர் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள்.
சிம்மம்

சூரியன் மற்றும் குரு உருவாக்கும் துவித்வாதச யோகமானது சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி தொழில் ரீதியிலும் சரி உச்சபட்ச சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.
இந்த ராசியினர் தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலகட்டமாக இது அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியாகும்.
நிதி சார்ந்த பிரச்சனைகள் நீங்கி புதிய வழிகளில் வருமானம் ஈட்டுவதற்காக யோகம் கூடிவரும். இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
துலாம்

சூரியன் மற்றும் குரு உருவாக்கும் துவித்வாதச யோகமானது துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில், பெரிய அளவில் நிதி முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
கடன் தொல்லைகளால் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவுகட்டும் அளவுக்கு பணவரவு திருப்பதிகரமாக இருக்கும்.
தனுசு

சூரியன் மற்றும் குருவின் துவித்வாதச யோகமானது தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்தையும் குடும்ப வாழ்வில் அமைதியையும் கொடுக்கும்.
சொத்து விடயங்களில் இருந்து வந்த வழக்குகள் முடிவுக்கு வரும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்ககளுக்கு அதற்காக சந்தர்ப்பம் உருவாகும்.