தினம் ஒரு திருவாசகம்

By Sakthi Raj Jun 21, 2024 05:00 AM GMT
Report

ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்

தாயான தத்துவனைத் தானே உலகேழும்

ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்

தினம் ஒரு திருவாசகம் | Thinam Oru Thiruvsagam Thevaram Siva Peruman News

விளக்கம்

சிவபெருமான் சிறிதேனும் இடைவெளியின்றி, நினைப்பவர் உள்ளத்தில், நீக்கமற நிறைந்திருப்பவன். அவ்வாறு நினைக்காதவர்க்கு தொலைவில் இருப்பவன்.

அடியவர்களுக்கு தொண்டனாக இருப்பவன். திருபெருந்துறை திருத்தலத்தை வாழ்விடமாகக் கொண்டவன். வேதங்களின் வடிவமாகத் திகழ்பவன்.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்- நேரலை

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்- நேரலை


உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவன். நாயான நம்மையெல்லாம் ஆட்கொண்ட தலைவன். தாயெனும் தத்துவப் பொருளானவன். தானே உலகங்கள் ஏழானவன்.

அவற்றை நல்ல முறையில் ஆள்கின்றவன். அத்தகையப் பெருமிதப் பண்புகள் கொண்டவனை இப்போது நாம் பாடி மகிழ்வோமாக! 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US