நாளை(09-06-2025) முருகப்பெருமான் அருளை பெற இந்த விஷயங்களை செய்ய தவறாதீர்கள்
கலியுக வரதன் முருகப்பெருமான் அவதரித்த தினம் தான் வைகாசி விசாகம் நாளாகும். அதோடு முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமும் இந்த வைகாசி ஆகும். இந்த திருநாளில் உலகம் எங்கிலும் இருக்கும் முருகப்பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு மேற்கொள்வார்கள்.
மேலும், இந்த வைகாசி விசாகம் ஒரு வாரம் முழுவதும் சில முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். வைகாசி விசாகம் நாள் அன்று சில பக்தர்கள் அவர்கள் வேண்டுதல் நிறைவேற பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் வழிபாடு செய்வார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வைகாசி விசாகம் எப்பொழுது? நாம் அன்று என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம். இந்த ஆண்டு, வைகாசி மாதத்தில் ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை வைகாசி விசாகம் வருகிறது.
ஜூன் 08ம் தேதி பகல் 02.10 மணிக்கு துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் ஜூன் 10ம் தேதி பகல் 12.27 மணிக்கு தான் பெளர்ணமி திதி துவங்குவதால் ஜூன் 9 ஆம் தேதி விரதம் இருப்பவர்கள் இருந்து வழிபாடு மேற்கொள்ளலாம்.
வைகாசி விசாகம் அன்று பூஜை செய்ய முதல் நாள் வீடுகளையும், பூஜை அறைகளையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு வைகாசி விசாகம் நாளன்று அதிகாலை எழுந்து முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க கொள்ள வேண்டும்.
முருகப்பெருமானின் விக்ரஹம் மற்றும் வேல் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம். அதாவது, அன்றைய தினம் முருகப் பெருமானின் மனம் குளிர குளிர பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
அதோடு முருகப்பெருமான் அவதரித்த அன்றைய நாளில், முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த சிவப்பு வெட்சி மலர், முல்லை, மல்லி, செவ்வரளி, தாமரை, செண்பகப்பூ ஆகிய ஆறு வகையான மலர்கள் வைத்து 6 நெய் தீபம் ஏற்றி, 6 வகையான இனிப்பு படைத்து, தீப ஆராதனை காண்பித்து திருப்புகழ் பாடி பூஜை நிறைவு செய்யலாம். அன்று முடிந்தவர்கள் முருகன் ஆலயம் சென்று அன்னதானம் வழங்குவது அவர்களுக்கு கோடிப் புண்ணியத்தை பெற்று கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |