மாலை நேரங்களில் வீடுகளில் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்

By Sakthi Raj Jun 08, 2025 07:03 AM GMT
Report

நம்முடைய வீடுகளில் மாலை விளக்கு ஏற்றிய பிறகு வாஸ்து சாஸ்திரப்படி மறந்தும் சில தவறுகள் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அவ்வாறு செய்வதால் நம் வீடுகளில் எதிர்மறை ஆற்றல் சூழந்து குடும்பத்தில் சில தடுமாற்றம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அப்படியாக, வாஸ்து சாஸ்திர ரீதியாக மாலை நேரம் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள் பற்றி பார்ப்போம்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலின் சிறப்புகளும் அம்மனின் அருளாசியும்!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலின் சிறப்புகளும் அம்மனின் அருளாசியும்!

1. நாம் ஒரு பொழுதும் மாலை நேரம் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு வீடுகளை துடைக்கக்கூடாது. அவ்வாறு துடைப்பத்தால் வீடுகளில் பண இழப்புகள், மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உருவாகுவதாக சொல்லப்படுகிறது. அதனால், வீட்டை துடைக்க வேண்டும் என்றால் காலை அல்லது மாலை நேரங்களில் வீடுகளை சுத்தம் செய்வது நன்மை தரும்.

2. அதே போல் வீடுகளில் சேர்ந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்றால் அதை மாலை நேரத்தில் அகற்றக்கூடாது. அவ்வாறு செய்வதும் வீட்டிற்கு அசுப பலன்களை கொடுப்பதாக சொல்கிறார்கள்.

மாலை நேரங்களில் வீடுகளில் மறந்தும் இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள் | 5 Things We Shouldnt Do In The Evening

3. மாலை நேரம் ஒரு பொழுதும் நாம் தலை முடியை வெட்டுவதோ நகங்களை வெட்டுவதோ செய்தல் கூடாது என்கிறார்கள். இவை எதிர்மறை சக்தியை ஈர்ப்பதாக சொல்கிறார்கள்.

4. மாலை நேரம் சூரியன் அஸ்தமனத்திற்கு பிறகு தூங்குவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக விளக்கு ஏற்றும் நேரத்தில் தூங்குவது மிகவும் அசுப பலனாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்வது மஹாலட்சுமி தாயாரின் கோபத்திற்கு ஆளாக்கக்கூடும் என்கிறது சாஸ்திரங்கள்.

5. சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒருவருக்கு கடன் கொடுப்பதோ வாங்குவதோ கூடாது என்கிறது சாஸ்திரங்கள். இவ்வாறு செய்யும் பொழுது நம் வீடுகளில் மஹாலட்சுமி தாயார் தங்குவது இல்லை என்கிறார்கள். அதே போல் விளக்கு ஏற்றிய பிறகு வீடுகளில் பூக்களை பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US