வீடுகளில் மாலை விளக்கு ஏற்றும் பொழுது செய்யக்கூடாத தவறுகள்

By Sakthi Raj May 20, 2025 05:30 AM GMT
Report

இந்து மதத்தில் தினமும் காலை மாலை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது நாம் அனைவரும் தவறாமல் பின்பற்ற கூடிய ஒன்றாகும். இதில் காலையில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் மாலையில் கட்டாயம் எல்லோரும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

அப்படியாக, நாம் மாலை வேளையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நாம் மறந்தும் செய்யக்கூடாத சில தவறுகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் மாலை விளக்கு ஏற்றும் பொழுது செய்யக்கூடாத தவறுகள் | Things To Follow While Doing Poojai At Home

1. தினமும் மாலை விளக்கு ஏற்றுவதற்கு என்று சரியான நேரம் இருக்கிறது. அதாவது, மாலை வேளையில் சூரியன் மறைவிற்கு முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது. மாலை 6 மணிக்கு மேல் தான் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்யவேண்டும்.

2. விளக்கு ஏற்றி வைப்பதற்கு என்று உரிய திசை இருக்கிறது. அதில் விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது தான் நாம் மகாலக்ஷ்மியின் அருளை பெற முடியும். அந்த வகையில் விளக்கு ஏற்றும் பொழுது லட்சுமி தேவியை மனதார நினைத்துக்கொண்டு வழிபாடு செய்து விளக்கு ஏற்ற வேண்டும்.

அதே போல், விளக்கு ஏற்றும் பொழுது வீட்டு வாசலின் இடது பக்கத்தில் தான் வைக்க வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு திசையில் விளக்கு வைக்கலாம்.

3. அதே போல் ஒரு பொழுதும் நாம் ஏற்றும் விளக்கை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தெற்கு திசை என்பது நம்முடைய முன்னோர்களை நினைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யகூடிய ஒரு திசை ஆகும். அந்த திசை யமராஜனுக்கு உரியது. அதனால் மறந்தும் அந்த திசையில் விளக்கு ஏற்றி வைக்கக்கூடாது.

துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ ஆன்மீகம் சொல்லும் வழி

துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ ஆன்மீகம் சொல்லும் வழி

4. நாம் மாலை வேளையில் விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது பின் வாசல் கதவை பூட்டி வைத்த பிறகு தான் விளக்கு ஏற்ற வேண்டும். அதே போல் விளக்கு ஏற்றிய உடனே நாம் முன் வாசல் கதவை பூட்டி விடக்கூடாது.

அதே சமயம் முன் வாசல் கதவு பூட்டிய நிலையிலும் விளக்குகள் ஏற்ற கூடாது. காரணம், நாம் மாலை வேளையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது மஹாலக்ஷ்மி தேவி நம்முடைய வீட்டிற்கு வருகை தருவதாக ஐதீகம்.

அதனால், விளக்கு ஏற்றிய பிறகு நேர்மறை சிந்தனைகள் கொண்டு இருக்க வேண்டும். அதோடு, சுவாமியின் மந்திரங்கள், பாடல்கள் ஒலிக்க செய்து அமைதியாக வேண்டுதல் செய்யலாம்.

5. வீடுகளில் சிலர் முக்கிய நிகழ்வுக்காக வேண்டுதல் வைப்பார்கள். அந்த காலத்தில் தினமும் காலை மாலை விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது அந்த வேண்டுதல் எந்த ஒரு தடையும் இன்றி நிறைவேறும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US