படுக்கை அறையில் இந்த விஷயங்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்
ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. அந்த வகையில், படுக்கையறை என்பது மனிதன் நிம்மதியாக உறங்கி மீண்டும் காலை எழுந்து கால சக்கரத்தோடு சேர்ந்து பயணிக்க கூடிய ஒரு நிம்மதியான நோக்கத்தை தரக்கூடியது.
அந்த வகையில், படுக்கை அறை சாஸ்திரப்படி நாம் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நாம் எப்பொழுதும் தவறியும் கட்டிலில் அமர்ந்து சாப்பிடவே கூடாது.

அதேபோல், நாம் தலைக்கு வைத்து தூங்கக்கூடிய தலையணையை காலுக்கு வைத்து தூங்க கூடாது.
நம்முடைய படுக்கை அறையில் தலைப்பகுதிகளில் மருந்து மாத்திரை டப்பாக்களை வைத்திருக்கக் கூடாது.
ஒருபொழுதும் தலையணை மேல் அமரவே கூடாது.
ஒரு சிலர் தங்களுடைய வேலை இல்லாத நேரங்களில் எப்பொழுதும் படுத்தே கிடக்கக்கூடிய ஒரு பழக்கத்தை வைத்திருப்பார்கள்.

அவ்வாறு எப்பொழுதும் நாம் படுத்தே கிடைக்கக்கூடாது. படுக்கையே பலகையாக மாறி போகும்.
அதைப்போல், இரவு நேரங்களில் போர்த்தி தூங்கக்கூடிய போர்வையை காலையில் எழுந்தவுடன் மடித்து வைக்க வேண்டும்.
இவையெல்லாம் சாதாரண ஒரு பின்பற்றுதலாக இருந்தாலும் இவை நம் வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற பொழுது ஒவ்வொரு மாற்றமும் மனரீதியாக ஒரு நல்ல நேர்மறை எண்ணங்களை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |