தயவு செய்து இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.. யாரிடமும் வாங்காதீர்கள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கிறது. அதனால் தான் முன்னோர்கள் நாம் ஒரு சில நேரத்திற்கு பிறகு ஒரு சில காரியங்களை செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
அது நமக்கு சிலர் தீய விளைவுகளை கொடுக்ககூடும். அந்த வகையில் இன்று வரை கிராமங்களில் மாலை ஆறு மணிக்கு மேல் வீடுகளில் உப்பு, பால், வாழை இலை பறிப்பது கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுகிறார்கள்.
இவ்வாறு கொடுக்கும் பொழுது மகாலட்சுமி நம் வீட்டை விட்டு வெளியேறுவதாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் கண்ணாடி துடைப்போம் போன்ற பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார். அதைப்போல் ஆன்மீகம் தொடர்பாக எந்த ஒரு பொருட்களையும் நாம் இலவசமாக வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
சிலை போன்ற விஷயங்களை நாம் ஒருவரிடம் இலவசமாக பெறுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். யாராவது தங்கத்தை குறைந்த விலைக்கு தருகிறேன் என்று பயன்படுத்திய தங்கத்தை கொடுக்கிறார்கள் என்றாலும் அதையும் வாங்குவதை நாம் தவிர்ப்பது நல்லது.
காரணம், இதற்கு பின்னால் ஒரு சில கர்ம வினைகளின் தொடர்பு இருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. இதை நாம் வாங்கும் பொழுது நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படியாக, நாம் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும்? தவிர்க்க வேண்டும் என்பதை இந்த காணொளியில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |