வீட்டில் செல்வம் பெருக தினம் இதை பாடுவோம்
ஒரு குடும்பம் மகிழ்ச்சையாக இருந்தாலும் அந்த மகிழ்ச்சி நீடிக்க கண்டிப்பாக பொருளாதாரம் மிக அவசியம்.
நன்றாக சம்பாதித்தாலும் அந்த வருமானம் சேமிப்பாக வீட்டில் தங்க எத்தனை சிக்கனமாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு யோகம் என்று ஒன்று அவசியம்.
அந்த யோகம் இறைவன் அருட்பார்வை கிடைத்தால் மட்டுமே சாத்தியம்.அப்படியாக வீட்டில் செல்வம் பெறுக வந்த செல்வம் நிலைத்து இருக்க என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
கும்பகோணத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாடுதுறை.
அங்கு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தந்தையின் தன் யாகத்திற்கு பொருள் வேண்டி இங்குள்ள மாசிலாமணீஸ்வரரிடம் தேவார பதிகம் பாடினார்.
சிவபெருமானும் இங்கு உள்ள பலிபீடத்தில் தினமும் 1000 பொற்காசுகள் கிடைக்க அருள் புரிந்தார்.
பத்து பாடல்கள் கொண்ட இந்த பதிகத்தை தினமும் மாலையில் விளக்கு ஏற்றி பிறகு பாடினால் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும் செல்வம் பெருகும் என பக்தர்களின் நம்பிக்கை.
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோயெமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே!.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்