திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

Tiruchirappalli
By Yashini May 03, 2024 10:39 AM GMT
Yashini

Yashini

Report

திருச்சியில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம்.

கல்யாண பரிகாரத் தலம் என்று போற்றப்படும் இந்த ஆலயத்துக்கு, அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவரும் வந்து தேவாரம் பாடி உள்ளனர்.

அப்பர் பெருமான், இந்தத் தலத்துக்கு வந்த போது வெயிலினாலும் கடும் பசியினாலும் களைப்புற்று சோர்ந்து போனார். 

திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா | Tirupainjelli Festival Appar Khatamudhu

அப்போது அப்பருக்கு அவரது களைப்பு தீர, சிவபெருமானே வந்து, பொதி சோறு எனப்படும் கட்டமுது வழங்கி பசியாற்றிய விழா கட்டமுது பெருவிழா.

அப்பர் பெருமான், ஞீலி வனேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கோயிலிலிருந்து அப்பர் கட்டமுது வழங்கிய இடத்திற்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க சென்றடைந்தது.

திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா | Tirupainjelli Festival Appar Khatamudhu

தொடர்ந்து, திருமுறைகள் பாடப்பட்டு அப்பர் பெருமானுக்கு கட்டமுது வழங்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

 

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US