திருப்பதியானின் வளர்ப்பு தாய் வகுல மாத கோவில் ஆண்டு கொண்டாட்டம்

By Yashini Jun 28, 2024 08:12 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையானின் வளர்ப்புத் தாயாக அழைக்கப்படும் வகுலா தேவிக்கு திருப்பதி அருகே கோவில் உள்ளது.

விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய் யசோதா, கிருஷ்ணரிடம், அவரது திருமணங்களில் எதையும் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

அதற்கு கிருஷ்ணன் கலியுகத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

திருப்பதியானின் வளர்ப்பு தாய் வகுல மாத கோவில் ஆண்டு கொண்டாட்டம் | Tirupati Vakulamata Temple Anniversary Celebration  

விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தபோது, யசோதை வெங்கடேஸ்வராவின் வளர்ப்பு தாயாக வகுலா தேவியாக மீண்டும் பிறந்தார்.

வெங்கடேஸ்வராவுக்கு பத்மாவதியுடன் திருமணத்தை ஏற்பாடு நடக்க, வகுலா தேவி வெங்கடேசப் பெருமானின் திருமணத்தை கண்டு தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீ வகுல மாதா கோவில் திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பேரூர் கிராமத்தில் ஒரு மலையில் அமைந்துள்ளது.

திருப்பதியானின் வளர்ப்பு தாய் வகுல மாத கோவில் ஆண்டு கொண்டாட்டம் | Tirupati Vakulamata Temple Anniversary Celebration  

இந்த கோவிலில் நாளை மறுதினம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழாவின் ஒரு பகுதியாக காலை 8 மணிக்கு மகாசாந்தி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. தொடர்ந்து, காலை 11 மணி முதல் 12 மணி வரை உற்சவருக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US