தினம் ஒரு திருவாசகம்

By Sakthi Raj Jun 27, 2024 06:30 AM GMT
Report

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே,

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே,

மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்

மனத்திடை மன்னிய மன்னே

சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்

திருப்பெருந் துறையுறை சிவனே

இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்

இனியுன்னை யென்னிரக் கேனே

தினம் ஒரு திருவாசகம் | Tiruvasagam Manikavasagar Mulamum Uraiyum Bakthi

விளக்கம்

முடிவில்லாத செழிப்பான ஒளி மலையே! வேதமாகிய மறையின் பொருளாகி என்னுடைய மனத்தின்கண் வந்து, நிலை பெற்ற தலைவனே!

கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல என் சித்தத்தின் கண் பாய்கின்ற திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே!

ஜேர்மன் முருகப்பெருமானுக்கு தேர்த்திருவிழா கொண்டாட்டம்

ஜேர்மன் முருகப்பெருமானுக்கு தேர்த்திருவிழா கொண்டாட்டம்


ஆன்ம நாதனே! நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய். இனிமேல் உன்னை யான் வேண்டிக் கொள்வது என்ன இருக்கிறது?

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US