இன்றைய ராசி பலன்(31-05-2025)
மேஷம்:
நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தொலை தூர பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்று மனதில் தேவை இல்லாத சிந்தனைகள் தோன்றி மறையும். ஒரு சிலருக்கு மதியம் மேல் சில உடல் உபாதைகள் தோன்றலாம். எதையும் தீர ஆலோசித்து பேசுவது நன்மை தரும்.
மிதுனம்:
பணியிடங்களில் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வார்கள். தாய் வழி உறவால் சில சங்கடமும் எதிர்ப்பும் உண்டாகும். மனதில் உயர்ந்த சிந்தனை தோன்றும்.
கடகம்:
முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். சிந்தித்து செயல்படுவீர்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லாம் விலகி செல்வார்கள். வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
கன்னி:
பொருளாதார சங்கடம் தீரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய நட்பும் அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் பலம் இழப்பர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
துலாம்:
இன்று பிறரை அனுசரித்து செல்வது நன்மை தரும். சிலருக்கு வேலையில் அதிக சுமை உண்டாகலாம். கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அமைதி காக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். திறமை வெளிப்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் விருப்பம் பலிக்கும்.
தனுசு:
இன்று சரியான தூக்கம் இல்லாமல் சிரமம் உண்டாகலாம். சிலருக்கு வெளியூர் பயணங்களில் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்:
இழுபறியாக இருந்த வேலை முடியும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வெளியூர் பயணம் லாபம் தரும். விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
கும்பம்:
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். வெளியூர் பயணம் லாபம் தரும். விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
மீனம்:
இன்று உடல் உபாதைகள் தோன்றி மறையும் நாள். இறைவழிபாடு நன்மை தரும். சிலருக்கு மதியம் மேல் எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் இடையே ஏற்பட்ட கசப்புகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |