மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள்

By Sakthi Raj Jun 09, 2025 09:07 AM GMT
Report

பொதுவாகவே பௌர்ணமி தினம் மிகவும் விஷேசம் வாய்ந்தவை. அதிலும் நாளை (10-6-2025) வைகாசி மாதத்துடன் வந்திருக்க கூடிய பௌர்ணமி திதியை மங்கள வார பௌர்ணமி திதி என்று சொல்லுவார்கள். காரணம் இந்த திதி செவ்வாய்கிழமையோடு வருவதே ஆகும்.

மேலும், பௌர்ணமி திதி அன்று நாம் இறைவழிபாடு செய்யும் பொழுது நமக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கிறது. அப்படியாக, இந்த நாளில் நாம் செய்யவேண்டிய வழிபாட்டையும் பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம்.

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள் | Tomorrow June 10 Porunami Worship And Benefits 

பொதுவாகவே ஒரு சிலருக்கு மன குழப்பங்கள் அதிகமாக இருக்கிறது என்றால், பௌர்ணமி தினத்தில் நிலவு வெளிச்சத்தில் சிறிது நேரம் அமர வேண்டும் என்று சொல்லுவார்கள். அதோடு, பௌர்ணமி நாளில் நாம் அம்மன் ஆலயங்கள் சென்று அங்கு நிலவு வெளிச்சத்தில் அமர்ந்தால் எவ்வளவு பெரிய மன குழப்பங்கள் கஷ்டங்கள் இருந்தாலும் அவை நம்மை விட்டு விலகும் என்று சொல்கிறார்கள்.

மன குழப்பங்கள் விலக நாளை (10-6-2025) பௌர்ணமி அன்று இந்த விஷயங்களை செய்யுங்கள் | Tomorrow June 10 Porunami Worship And Benefits

மேலும், இந்த பௌர்ணமி தினம் ஆனது நாம் ஆன்மீக பயணத்திற்கு உகந்த தினம் ஆகும். அதனால் நாம் அன்றைய தினம் விரதம் இருந்து மனதை ஒருநிலை செய்து தியானம் மற்றும் இறைவழிபாடு செய்யலாம், இவ்வாறு செய்யும் பொழுது நாம் இறைவனை உணரலாம்.

ஆக, நாளை வரக்கூடிய இந்த பௌர்ணமி தினம் அன்று அதிகாலை குளித்து முடிந்த அளவு அன்று மௌன விரதம் மேற்கொண்டு இறைவனை மனதில் நிறுத்தி தியானம் செய்தால் இறைவனின் அருளால் பிறப்பின் உண்மையும், வாழ்க்கையின் தத்துவமும் தெளிந்த மனநிலையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலலாம். அதோடு நம் வாழ்க்கையில் சந்திக்கும் எப்பேர்ப்பட்ட துன்பங்களாக இருந்தாலும் அதற்கான நல்ல முடிவு கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US