திருப்பதி லட்டில் இத்தனை வகைகள் இருக்கிறதா?
நம்முடைய இந்தியாவில் மிகவும் பிரபலமான கோயில்களில் திருப்பதி முதல் இடம் பிடிக்கிறது. இக்கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும், திருப்பதி கோயிலில் சுவாமிக்கு அடுத்தபடியாக அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டும் மிகவும் விசேஷமாகும்.
அப்படியாக, நம்மில் பலருக்கும் திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளில் இருக்கும் வகைகள் பற்றி தெரிவதில்லை. அதை பற்றி பார்ப்போம். திருப்பதியில் வழங்கப்படும் லட்டு உலக புகழ் வாய்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அங்கு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் லட்டுகள் தயார் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் நமக்கு சேர்ந்து கிடைப்பதாக பக்தர்கள் நம்பி வாங்கி செல்கிறார்கள்.
இந்நிலையில், திருப்பதியில் மூன்று வகையான லட்டுகள் செய்கின்றனர். ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. அந்த லட்டுகளை பற்றி பார்ப்போம்.
1. ஆஸ்தான லட்டு:
இந்த லட்டு மிகவும் முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த லட்டு 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
2. கல்யாண உற்சவ லட்டு:
இந்த லட்டு கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு ஆகும். இது 750 கிராம் எடையுடன் இருக்கக்கூடிய லட்டு ஆகும். இவை பிற லட்டுகளை விட மிகவும் குறைந்த அளவே தயாரிக்கப்படுகிறது.
3. புரோகிதம் லட்டு:
இந்த லட்டு பொதுவான மக்களுக்கு வழங்கப்படும் லட்டு ஆகும். மேற்கண்ட மூன்று வகை லட்டுகளில் இந்த லட்டு தான் இடையில் மிகவும் குறைந்து காணப்படும் லட்டு ஆகும். இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் தான் திருப்பதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |