உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்-மிதுனம்

By Sakthi Raj Jun 21, 2024 09:30 AM GMT
Report

நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

மிருக சீரிடம்

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி

பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி

எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி

என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி

மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி க

ண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்-மிதுனம் | Ungal Pirantha Natchathirathirkana Thevaram Padal

திருவாதிரை/ஆதிரை

கவ்வைக் கடல் கதறிக் கொணர்

முத்தம் கரைக்கு ஏற்றக்

கொவ்வைத் துவர் வாயார்

குடைந்து ஆடும் திருச்சுழியல்

தெய்வத்தினை வழிபாடு செய்து

எழுவார் அடி தொழுவார்

அவ்வத் திசைக்கு அரசு

ஆகுவர் அலராள் பிரியாளே.

வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?


புனர்பூசம்

மன்னும் மலைமகள் கையால்

வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறும் தூப்பொருள்

ஆயின தூக்கமலத்து

அன்னவடிவின அன்புடைத்

தொண்டர்க்கு அமுது அருத்தி

இன்னல் களைவன இன்னம்பரான்

தன் இணை அடியே. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US