இன்றைய ராசி பலன்(22-10-2025)
மேஷம்:
குடும்பத்தில் சந்தோஷமான நிலை உண்டாகும். வியாபாரத்தில் நட்பு வட்டாரம் விரிவைடையும். முக்கிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். மாலை மேல பொறுமை தேவை.
ரிஷபம்:
இன்று நீங்கள் செயல்களில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று உடன் இருப்பவர்களை பற்றி நன்றாக புரிந்து கொள்வீர்கள். உங்களுடைய கற்பனை திறன் அதிகரிக்கும். கனவுகளை நோக்கி பயணம் செல்லக்கூடிய நாள்.
கடகம்:
இன்று தொலை தூர பயணத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆறுதல் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.
சிம்மம்:
அரசு தொடர்பான விஷயங்களில் முழு கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் மேம்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பூர்விகத்தில் உள்ள குழப்பம் விலகும்.
கன்னி:
இன்று உங்கள் பேச்சுக்களில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்களிடம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அக்கம் பக்கத்தினரிடம் வார்த்தையை பார்த்து பேசுங்கள்.
துலாம்:
நண்பர்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். அரசு காரியங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவீர்கள்.
விருச்சிகம்:
எடுத்த காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது அவசியம் ஆகும்.
தனுசு:
குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கனத்தை சரி செய்யுங்கள். மனதில் பல குழப்பங்களும் யோசனைகளும் உண்டாகும். உங்களின் முயற்சிக்கு ஏற்ப பலனும் பாராட்டுகளும் கிடைக்கும்.
மகரம்:
உங்களின் குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.
கும்பம்:
எதிர்காலம் பற்றிய தேடுதலில் இறங்குவீர்கள். சில நெருக்கடியான சூழல் உருவாகலாம். வியாபாரத்தில் பொறுமை அவசியம். வரவு செலவுகளில் சிக்கனமும் கவனமும் தேவை.
மீனம்:
அலுவலகத்தில் சில கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சிலருக்கு விமர்சனமான பேச்சுக்களை சந்திக்கும் நிலை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







