வாழ்க்கையில் தடங்கல் விலக நாம் செய்ய வேண்டிய தானம்
நம் வாழ்க்கையில் எதையும் தெரிந்தே செய்வதில்லை.சந்தர்ப்பங்களில் தான் நல்லவர்களும் கெட்டவர்களும் மாறிவிடுவார்கள்.அப்படி செய்யும் பொழுது பாவங்கள் நம்மை சுத்திவரும்.
அப்படி பாவங்கள் கரைய பசு மாட்டிற்கு உணவளிக்க நம்முடைய பாவங்கள் கரையும் என்பது நம்பிக்கை. இந்துக்களில் நாம் கோமாதாவை தெய்வமாக கருதி வழிபடுவோம்.
கோமாதாவை நாம் முழுமனதோடு வழிபட கோமாதாவிடம் இருக்கக்கூடிய தேவர்களின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். அப்படி பெறுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் நாம் வாழலாம்.
அப்படியாக கோமாதாவிற்கு நாம் தானம் செய்யவேண்டிய பொருட்களை பற்றி பார்ப்போம். இந்த தானத்தை நாம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
இந்த தானத்தை தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் அல்லது மாதத்தின் ஒரு நாள் என்று 7 மாதங்களோ வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதற்கு நமக்கு ஒரு கைப்பிடி உளுந்து இருந்தால் கூட போதும். இந்த உளுந்தை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் வெள்ளிக்கிழமை அன்று சாதத்தை எடுத்து கொண்டு அதில் மேலும் தண்ணீரை கலந்து எடுத்து கொள்ளவேண்டும்.
இதை பசு குடிப்பதற்கு ஏற்றார் போல் தண்ணீர் கலந்து உப்பு போட்டு தயார் செய்து கொள்ள வேண்டும். தயார் செய்த இந்த கூழை அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும்.
அப்படி கொடுப்பதற்கு முன்பாக பசுமாட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை தொட்டு வணங்கி விட்டு பிறகு அந்த கூழை பசு மாட்டிற்கு தரவேண்டும்.
பசுமாடு அதை குடித்த பிறகு மீதம் சிறிதளவாவது அதில் இருக்கும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.
இந்த முறையில் நாம் பசு மாட்டிற்கு தானம் செய்யும் பொழுது நமக்கு மனரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் உடல்ரீதியான பிரச்சினைகள் தீரும்.
இதை யார் முழு மனதோடு செய்தாலும் அவர்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |