நல்ல விலையில் நிலம் விற்க,வீடு கட்ட செய்யவேண்டிய பரிகாரம்
பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.அந்த வகையில் பொன் பொருள் இவை தான் நமக்கு பணம் இல்லாத சமயத்தில் அவசர தேவையில் உதவி செய்யும் பொருட்கள் ஆகும்.
அபப்டியாக அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் வாங்கிய நிலம் அதை நல்ல விலைக்கு விற்றாவது நம்முடைய தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ளமுடியும்.
அதனால் தான் பெரியவர்கள் சேமிப்பை பொருள் அல்லது நிலத்தில் சேமித்து வையுங்கள் என்று சொல்லுகிறார்கள்,மேலும் பொன் ஆனது நம் நினைத்த நேரத்தில் அடகு வைத்து பணம் பெற்று கொள்ளலாம்.ஆனால் நிலம் ஆனது அதற்கான நேரம் வரும் பொழுது தான் விற்கநேரிடும்.
சிலர் வாங்கிய நிலத்தை விற்று வேறு இடத்தில் நிலம் வாங்கலாம் என்று யோசனை செய்தாலும் அவர்கள் நினைத்த நேரத்தில் நிலம் விற்க தாமதம் ஆகும்.அவர்கள் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.
நிலம் நினைத்த விலையில் விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் புதன் ஓரையில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு கைப்பிடி மண்ணை நீங்கள் விற்க முடியாத இடம் அல்லது வீட்டில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மண்ணை எடுத்து ஒரு பேப்பர் அல்லது பாலிதீன் கவரில் கட்டிக் கொண்டு பின்னர் வராக பெருமாள் கோவிலுக்கு சென்று அவருடைய பாதத்தில் வைத்து உங்களுடைய கோரிக்கையை வைத்து வழிபடவேண்டும்.
அதாவது என்னுடைய நிலத்தை நான் நினைத்தபடி நினைத்த விலையில் விற்பனை செய்துவிட வேண்டும் அல்லது வீட்டை நல்ல லாபத்தில் விற்று விட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த மண்ணை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் அந்த இடத்தில் போட்டு விடுங்கள்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று வெள்ளிக் கிழமைகளில் செய்ய வேண்டும். மூன்று வெள்ளிக்கிழமைகள் இவ்வாறு நீங்கள் செய்து வர 90 நாட்களில் நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே இதை தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் தொடர்ந்து செய்யுங்கள்.
வராக பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வராக பெருமாள் படத்தை வாங்கி வைத்தும் இவ்வாறு வழிபடலாம். நிலம் மற்றும் வீடு பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டுமல்லாது சொந்த பூமி வாங்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வராகப் பெருமாளை தொடர்ந்து வழிபடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |