எதிரிகள் தொல்லையில் இருந்து காக்கும் வாராகி மாலை பாடல்
தெய்வங்களின் மிகவும் உக்கிரமான தெய்வம் வாராஹி அம்மன் ஆவாள். இவளை வழிபாடு செய்வது அவ்வளவு எளிது அல்ல. மனதில் எந்த ஒரு வஞ்சகமும், பொய்யும், இல்லாத தூய்மையான உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே வாராஹி அம்மனை நெருங்க முடியும்.
மேலும், வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லையே இருப்பது இல்லை என்கிறார்கள். இருந்தும் சமயங்களில் நேரம் சரி இல்லை என்றபொழுது பல்வேறு திசைகளில் இருந்து நமக்கு ஆபத்துகள் சூழந்து விடும்.
அவ்வாறு செய்வதறியாது நிற்கும் வேளையில் நாம் வாராஹி அம்மனை சரண் அடைய அம்மன் நம்மை காத்தருளுகிறாள். அதோடு, தினமும் மாலை விளக்கு ஏற்றிய பிறகு வாராகி அம்மனின் வாரஹிமாலை பாடி வந்தால் மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும்.
நாம் இப்பொழுது வாழ்க்கை இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு விடும் பொழுது மனம் தளராமல் பாட வேண்டிய வாராகி அம்மன் மாலை பாடலை பற்றி பார்ப்போம்.
பகைமுடித்தல்:
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே.
பொருள்:
எவர் ஒருவர் வாராகி அம்மனின் பக்தர்கள் என்று அறியாமல் அவர்களை மிகவும் தொந்தரவு செய்கிறார்களோ அவர்களை வாராஹி அம்மன் நிச்சயம் தண்டிக்காமல் விடமாட்டாள் என்பது நம்பிக்கை.
அவ்வாறு வேண்டுமென்றே தீமை செய்பவர்களிடம் தங்களை காத்துக்கொள்ள இந்த வாராகிமாலையை பாடி வர எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும். அதோடு நீதிமன்றத்தில் சந்திக்கும் வழக்குகளும் வெற்றியைப் பெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |