"வரம் தரும் பெருமாள் "எங்கு இருக்கிறார் தெரியுமா?

By Sakthi Raj May 20, 2024 09:21 AM GMT
Report

கேட்டதை கொடுப்பவர் கிருஷ்ணர்.அப்படியாக கேட்ட வரத்தை உடனே அருளுகிறார் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள "வரம் தரும் பெருமாள்".

இத்திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானது.இக்கோயில் இந்த ஊரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் மேலும் நம் இந்த கோயிலுக்கு சென்று சுவாமியிடம் மனம் உருகி கேட்க அதை உடனே நடத்தி கொடுப்பதாக பக்தர்கள் சொல்கின்றனர்..

"வரம் தரும் பெருமாள் "எங்கு இருக்கிறார் தெரியுமா? | Varam Tharum Perumal Tirunelveli Vainavam News

ஒரு முறை அரசு அதிகாரி ஒருவர் தன் வேளையில் நேர்மையாக இருப்பதை பொறுக்காத சில உயர் அதிகாரிகள் இவரை தொடர்ந்து தொந்தரவு கொடுத்தும்,பணி மாற்றம் செய்வதுமாக இருந்து இருக்கின்றனர்.

இந்த அதிகாரி மிகுந்த பெருமாள் பக்தர்.தற்சமயமாக தச்சநல்லூர் வழியாக வந்து கொண்டு இருக்கும்பொழுது "வரம் தரும் பெருமாள் கோயில்" இவர் கண்களுக்கு தென்பட்டு இருக்கிறது.வரம் தரும் பெருமாள் கோயில் அவ்வளவு பெரிய கோயில் இல்லை .

"வரம் தரும் பெருமாள் "எங்கு இருக்கிறார் தெரியுமா? | Varam Tharum Perumal Tirunelveli Vainavam News

ஆனால், கோயில் நுழைவாயில் பார்த்தால் மனம் கவலைகள் இங்கு சொல்ல எதோ பாரம் குறைவது போல் தோற்றம் அளிக்கும்.

அப்படியாக இவரும் மன கவலையுடன் கோயில் உள்ளே சென்று பெருமாளை மனம் உருகி தன் அலுவலகத்தில் நடக்கும் அதர்ம செயல்களை சொல்லி பிராத்தனை வைத்து வெளியில் வர இவரின் பழைய நண்பர் ஒருவர் இவருக்காக பெருமாளே அனுப்பி காத்திருப்பதாக போல் நின்று கொண்டு இருந்திருக்கிறார்.

அந்த நண்பரை அவர் பார்த்து பல ஆண்டுகள் இருக்கும்.அப்பொழுதி குடும்பம் ,வேலை இது எல்லாம் பேசி கொண்டு இருக்க ,அவரிடம் தன் அலுவலகத்தில் நடந்தவற்றை எல்லாம் சொல்ல, அவர் வேறு ஒரு நண்பர் உதவி செய்வார் அன்று தொலைபேசியில் அறிமுகம் செய்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்


ஆனால் இவருக்கோ மனதில் ஏக குழப்பங்கள் .ஏன் என்றால, இதற்கு முன்னாள் பல பேரை உதவி என்று பார்த்து வேலை நடக்கவில்லை.ஆனால் இவரின் நண்பர் அறிமுகம் செய்த  மற்றோரு நபர் அந்த ஊரில்  செல்வாக்கு உடையவர்.

ஆதலால்,மனதில் பெருமாளை வேண்டிய படி அலுவலகத்தில் தன்னுடைய இன்னல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டும் என்று வேண்டியவாறு அவரை சந்திக்க முற்று புள்ளிக்கு ஆரம்பமாக அவரின் பேச்சும் செயலும் இருந்தது.

மேலும் சிறிது காலங்களில் தன் நண்பர் அறிமுகப்படுத்தியவரால் அலுவலக பிரச்னையும் முடிவுக்கு வந்தது.இதில் அற்புதம் என்னவென்றால் வரம் தரும் பெருமாளை அவர் தரிசித்து வெளியில் வர நின்று கொண்டு இருந்த நண்பனின் பெயர் கருமலையான்.பெருமாளின் பெயர்.

ஆக மனம் கலங்கி வரம் தரும் பெருமாளை அடிக்கடி தரிசிக்க அவர் அருளால் வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளும் விலக ஆரம்பித்திருக்கிறது.

மன கவலைகள்,தீராத பிரச்னைகளுக்கு வரம் தந்து நல்ல முடிவை அருள்கிறார் வரம் தரும் பெருமாள்.

நாமும் நேரம் கிடைக்கும் வேளையில் பெருமாளை தரிசித்து அருள் பெற்று வருவோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US