சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம்
சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவாக இருக்கும்.சிலருக்கு பூர்விமாக சொந்த வீடு இருந்தாலும் கால போக்கில் சில சூழ்நிலைகள் காரணமாக பூர்விக வீடு நிலங்கள் விற்கவேண்டிய கட்டாயம் அமைந்து விடும். அப்படியானவர்களுக்கும் ஏன் மனிதனாக பிறந்த அனைவர்க்கும் வீடு என்பது மிக தேவையான ஒன்று.
அது சொந்தமாக இருக்க வேண்டும் என்று பலரும் உழைத்து காசு சேமித்து நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று ஆவலோடு இருப்பார்கள்.ஆனால் அவர்களுக்கு சில நேரங்களில் அந்த கனவு சில தடங்கல் காரணமாக நிறைவேறாத ஆசையாக இருக்கும்.
மேலும்,எந்த ஒரு காரியமும் மனதார நினைத்துவிட்டால் நிச்சயம் அந்த இலக்கை அடைய பிரபஞ்சம் வழிகாட்டும் என்பது தவிர்க்க முடியாது உண்மை.கூடுதலாக இறை வழிபாட்டோடு சேர்த்து சில பரிகாரங்கள் செய்ய கண்டிப்பாக நாம் நினைத்த காரியம் நடந்தேறும்.அந்த வகையில் சொந்த வீடு கட்ட நாம் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி பார்ப்போம்.
தர்ம சாஸ்திரத்தில் 120 விரதங்கள் இருப்பதாகவும் அதை தர்மபுத்திரர் நாரதருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அப்படியாக சொந்த இன்னும் அமையவில்லையே என்று கவலைப்படுபவர்கள் வீட்டில் ஐந்து செங்கற்களை ஈசான்ய மூலையில் வைத்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பூமி தேவியையும், வாஸ்து பகவானையும் செவ்வாய் கிரகத்தையும் நினைத்து விரதமிருந்து பூஜை செய்து வரவேண்டும்.
மேலும் செவ்வாய் கிழமை கோலம் போட்டு அதன் மேல் நல்எண்ணைய் நெய், தேங்காய் எண்ணைய் ஊற்றி தனி தனி தீபம் ஏற்றி கற்கண்டு, தாம்பூலம் அவல் பொரி கடலை படைத்து கற்பூர ஆரத்தி காட்டி 5 கற்களுக்கும் மலர் நவதான்யம் போட்டு வழிபட்டு இரவு பாலும், பழமும் சாப்பிட வேண்டும்.
இவ்வாறு 21 செவ்வாய் விரதம் இருந்து ஒரு வாஸ்து நாளில் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். பிறகு இறைவனிடம் மனதார தங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் வேண்டி கொள்ள நிச்சயம் இறைவனின் அருளால் சொந்த வீடு விரைவில் கட்டும் யோகம் கடவுள் தருவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |