எந்த கிழமைகளில் எந்த விஷயங்கள் செய்வதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அப்படியாக, அதில் சில விஷயங்களை நாம் ஒரு சில கிழமைகளில் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அவ்வாறு எந்த கிழமைகளில் என்ன செய்யவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
திங்கட்கிழமை:
திங்கட்கிழமை அன்று இறந்தவர்களின் வீட்டிற்கு சென்றால் அங்கு நாம் தங்கிவிடக்கூடாது.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்கிழமை அன்று நாம் அணிந்து இருக்கும் தங்க நகைகளை ஒரு பொழுதும் கழட்டி வைக்கக்கூடாது. இவை பொருளாதார சிக்கலை உண்டு செய்யும்.
புதன் கிழமை:
பொதுவாக கண் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதை புதன் கிழமைகளில் செய்வதை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். ஆனால், இது கட்டாயம் அவசர சிகிச்சைக்கு பொருத்தமற்றது.
வியாழக்கிழமை:
வீடுகளில் சிலர் துளசி செடியை வைத்து வழிபாடு செய்வார்கள். அவர்கள் கட்டாயம் வீடுகளிலும், கடைகளிலும் வியாழக்கிழமை அன்று அசைவ உணவுகளை உண்ணக்கூடாது.
வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை அன்று முடிந்த வரை கடன் கொடுப்பதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை பண இழப்புகளை கொடுக்கும்.
சனிக்கிழமை:
அதே போல் சனிக்கிழமை நாம் கட்டாயம் பிறரிடம் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவை வீண் பண நஷ்டத்தை கொடுத்து விடும்.
ஞாயிற்றுகிழமை:
ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்த வரை இரும்பு தொடர்பான பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |