வீட்டில் சிலந்தி வலை பின்னி இருந்தால் ஆபத்தா?
நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிக அவசியம். அப்படி சுத்தமாக வைத்துக் கொள்வதால் நம் வீடும் நம்முடைய ஆரோக்கியமும் மேம்படும்.
அதுமட்டுமல்லாமல் ஜோதிட ரீதியாக நம் வீடு சுத்தமாக இல்லாவிட்டால் நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
வீட்டில் தூசிகள் அதிகமானால் சிலந்தி வலை பின்னி கொள்ளும்.அப்படி பின்னினால் நிறைய ஆபத்துகள் ஏற்படுகிறது. நம் வீட்டில் சிலந்தி வலை பின்னினால் அதை உடனே அகற்றி விட வேண்டும் ஏனென்றால் சிலந்தி வலை பின்னுவது நம் வீட்டில் பல சங்கடங்களை உருவாக்கக்கூடும்.
அதாவது நம் வீட்டில் சிலந்தி வலை எந்த இடத்தில் பின்னுகிறதோ அந்த இடத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய வீட்டு சூழலிலும் நம் வீட்டு பிரச்சினைகளையும் வளரும்.
சமையல் அறைகள் சிலந்தி வலை பின்னினால் நம் வீட்டில் பொருளாதார நிலை குறைபாடு ஏற்படும் என்று ஐதீகம் அதே சிலந்தி வலை படுக்கை அறையில் பின்னி இருந்தால் சந்தோசம் குறையும்.
பூஜை அறையில் சிலந்தி வலை பின்னி இருந்தால் லட்சுமி கடாக்ஷம் குறையும். நம் வீட்டில் கழிவறையில் சிலந்தி வலை பின்னி இருந்தால் குடும்பத்தில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும்.
ஆக போதுமான அளவு வீட்டை சுத்தம் செய்து வைத்து கொள்வது அனைத்து ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |