முருகப்பெருமான் அருளை பெற நாளை ஏற்ற வேண்டிய வெற்றிலை தீப வழிபாடு

By Sakthi Raj Jun 02, 2025 10:44 AM GMT
Report

 கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் பக்தர்களின் துயர் துடைத்து நல்வாழ்வு வழங்கக்கூடியவர். இவரை வழிபட எல்லா நாட்களும் உகந்த நாள் என்றாலும் குறிப்பாக செவ்வாய் கிழமை முருகப்பெருமான் வழிபாட்டிற்கு உரிய முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் முருகப்பெருமானின் அருளை பெற நாம் செவ்வாய் கிழமை அன்று செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமான் மனம் குளிர்ந்து நமக்கு அருள் வழங்குகிறார். நம்முடைய இந்து மதத்தில் வெற்றிலைக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்படுகிறது.

முருகப்பெருமான் அருளை பெற நாளை ஏற்ற வேண்டிய வெற்றிலை தீப வழிபாடு | Vetrilai Deepam Valipaadu Palangal

காரணம் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வெற்றிலையில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் வெற்றியை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு நெய் தீபம், எலுமிச்சை பழம் தீபம் ஏற்றுவதை காட்டிலும் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த வெற்றிலை தீபத்தை ஏற்றி மனம் உருகி தொடர்ந்து 9 வாரங்கள் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது தீராத நம்பிக்கை.

பல்லி தலைக்கு மேல் விழுந்தால் நன்மையா? தீமையா?

பல்லி தலைக்கு மேல் விழுந்தால் நன்மையா? தீமையா?

மேலும், இந்த வெற்றிலை தீபத்தை ஏற்றும் பொழுது நுனியில்லாத வெற்றிலை பயன்படுத்தக்கூடாது. அதோடு வெற்றிலையில் காம்போடு விளக்கேற்றக்கூடாது.இந்த வெற்றிலை தீபம் ஏற்ற 12 வெற்றிலையை எடுத்து கொள்ள வேண்டும்.

முதல் ஆறு வெற்றிலைகளை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து மயில் தோகை போல் வட்டமாக அடுக்கி வைக்கவேண்டும். பிறகு அடுக்கி வைத்த வெற்றிலையின் நடுவில் நாம் தீபத்தை ஏற்ற வேண்டும்.

முருகப்பெருமான் அருளை பெற நாளை ஏற்ற வேண்டிய வெற்றிலை தீப வழிபாடு | Vetrilai Deepam Valipaadu Palangal

பிறகு அதில் இரண்டாவது ஆறு வெற்றிலையில் காம்புகளை கிழித்து காம்புகளை எல்லாம் விளக்கிலிருக்கும் நல்லெண்ணெயில் போட்டு விடவேண்டும். அவ்வாறு போடும் பொழுது அதில் நல்ல நறுமணம் வீடு முழுவதும் பரவும்.

அதோடு இந்த வெற்றிலை தீபத்தை செவ்வாய் கிழமை அதிகாலையில் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் ஏற்றி விடலாம். அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் ஏற்றி வழிபாடு செய்யலாம். இவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய மனம் தெளிவடைவதோடு முருகன் அருளால் நம் வாழ்க்கை வளமாக மாறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US