வீட்டில் பணம் நிரம்பி வழிய உதவும் வெற்றிலை பரிகாரம்

By Yashini Aug 19, 2024 07:27 AM GMT
Report

பணக்கஷ்டம் என்பது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

ஆனால் சிலர் தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில், நம்முடைய தரித்திரம் நீங்கிபணம் நிரம்பி வழிய உதவும் வெற்றிலை பரிகாரம் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

வீட்டில் பணம் நிரம்பி வழிய உதவும் வெற்றிலை பரிகாரம் | Vetrilai Parigaram In Tamil

வெற்றிலை பரிகாரம்

இந்த பரிகாரத்தை குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறந்தது. 12 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இதற்கு நமக்கு 11 அல்லது 21 வெற்றிலைகள் வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பின் வெற்றிலையை ஒரு துணியை வைத்து துடைக்க வேண்டும்.

பிறகு அதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துவிட்டு தீபம் ஏற்றி எப்பொழுதும் போல் வழிபாட்டை நிறைவு செய்யவும்.

பின் ஒவ்வொரு வெற்றிலையிலும்சந்தனம் குங்குமம் வைத்து உங்களுடைய கஷ்டங்கள் என்னென்ன இருக்கிறதோ அவை அனைத்தையும் கூற வேண்டும்.

இந்த வழிபாட்டை குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது விநாயகப் பெருமான் இவர்களில் ஒருவரை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

வீட்டில் பணம் நிரம்பி வழிய உதவும் வெற்றிலை பரிகாரம் | Vetrilai Parigaram In Tamil  

இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த வெற்றிலையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அன்று மாலை வீட்டில் விளக்கேற்றி பூஜையை முடித்த பிறகு ஒரு வெள்ளை நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவி வெற்றிலையை மாலையாக கட்ட வேண்டும். 

கட்டிய இந்த வெற்றிலை மாலையை நம் வீட்டில் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.

அடுத்த வாரம் இதே முறையில் வழிபாடு செய்து பழைய வெற்றிலை மாலையை கழட்டி கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய மலையை வாசலில் கட்டவும்.

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US