திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்

By Sakthi Raj Jun 19, 2025 06:56 AM GMT
Report

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். அந்த திருமணம் ஆனது ஒரு மனிதனுக்கு சரியான வயதில் நடக்கவேண்டும். கால தாமதம் ஆக ஆக அது குடும்பத்தில் எல்லோருக்கும் ஒருவித மனஉளைச்சல் கொடுத்து விடும்.

அப்படியாக, சிலருக்கு காரணமே இல்லாமல் திருமணம் தாமதம் ஆகுவதை நாம் காணமுடியும். எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் அவர்களுக்கு அது கைகொடுத்திருக்காது. அப்படியானவர்கள் ஒருமுறை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்த கோயிலுக்கு சென்று வர நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் விரைவில் திருமணம் நடப்பதை காணலாம்.

திருமண தாமதத்திற்கு கிரக தோஷங்களும் ஒருவகை காரணமாக இருக்கலாம். அவ்வாறு கிரக தோஷம் உள்ளவர்கள் திருவக்கரையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில் சென்று வழிபாடு செய்து வர அவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் என்று சொல்கிறார்கள்.

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் | Villupuram Chandramoulishvarar Temple In Tamil

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரையில் அமைந்து உள்ளது பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முக லிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்தது கைகூடி வரும்

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்தது கைகூடி வரும்

இங்குள்ள இறைவனின் திருநாமம் சந்திரசேகரன், அன்னை வடிவாம்பிகை. இந்த கோயிலில் இன்னோரு சிறப்பு இந்த கோயிலில் பெருமாள் சன்னிதியும் உள்ளது. குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவரை அழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள் | Villupuram Chandramoulishvarar Temple In Tamil

அப்படியாக, திருமணம் வயது கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் ஒருமுறை இத்தலத்திற்கு சென்று தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தால் அவர்களுக்கு விரைவில் இறைவனின் அருளால் திருமணம் நடைப்பெறும் என்பது நம்பிக்கை.

அதே போல் நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.

ஆக, வாழ்க்கையில் மாற்றம் எங்கு இருந்து நிகழும் என்று யாருக்கும் தெரியாது. முழு நம்பிக்கையோடு ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வர வாழ்க்கையில் சந்தித்த தடைகள் எல்லாம், விலகி விரைவில் திருமணம் நடைப்பெறும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US