விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்?

By Sakthi Raj Sep 05, 2024 05:28 AM GMT
Report

கடவுள்களில் மிகவும் எளிமையின் வடிவானவர் விநாயகர்.இவர் பிற தெய்வங்களை காட்டிலும் விநாயக பெருமானுக்கு பூக்களை விட இலைகளின் மீது தான் அதிக பிரியம்.

அப்படியாக வருகின்ற(07.09.2024)அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது,அன்றைய தினத்தில் வீட்டில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நெய்வேத்தியம் எல்லாம் படைத்து வழிபாடு செய்வோம்

இப்பொழுது அன்றைய தினத்தில் விநாயகருக்கு செய்யபடும் முக்கியமான பத்தர வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்? | Vinayagar Chathurthu Poojai Seiyum Murai

விநாயகருக்கு வன்னி இலை மற்றும் அருகம்புல் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது.அவ்வாறு வழிபடுவதின் பெயர் தான் பத்ர வழிபாடு.பத்ரம் என்றால் இலை என்று பொருள்.பொதுவாக பூக்களை காட்டிலும் இலைகள் பல இடங்களில் எளிதாக கிடைக்கக் கூடியவை.

வீட்டிற்கு அருகில் கிடைக்கும் இலைகளைக் கொண்டு பூஜை செய்வதால் "இல்லை என்ற சொல்லே இல்லை" என்பது அடியார் வாக்கு.

அன்னதானமே ஒரு சிறந்த பரிகாரம்!

அன்னதானமே ஒரு சிறந்த பரிகாரம்!


மாசி இலை, கிளா இலை, வில்வம், அருகு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

அந்த வரிசையில் விநாயகரின் உருவத்தை ஒற்றி இருக்கும் கற்பூரவள்ளி இலையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றுள் நம் வீட்டுக்கு அருகே கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் அர்ச்சித்தாலே போதுமானது என்றாலும் ஒவ்வொரு இலைக்கும் ஒரு பலன் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்? | Vinayagar Chathurthu Poojai Seiyum Murai

வன்னி இலை கொண்டு விநாயகருக்கு பூஜை செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகி சுகமான வாழ்வு கிடைக்கும்.

ஒருவரது வளர்ச்சி என்பது பலருக்கும் பொறுக்காத ஒன்று.எதிரிகள் ஏற்படுகிறார்கள் என்றாலே அந்த நபர் வளர்ந்து கொண்டு இருக்கிறார் என்று பொருள்.அப்படியாக எதிரிகள் தொல்லை இருப்பவர்கள் விநாயக பெருமானுக்கு மாவிலை கொண்டு பூஜை செய்ய எதிரிகளின் சூழ்ச்சியினால் ஏற்பட்ட வழக்குகள் நல்ல முறையில் தீரும்.  

உலகத்தில் மனிதனாக வாழ உயிரை காட்டிலும் பணம் பெரும் தேவையாக இருக்கிறது.அப்படியான பண கஷ்டத்தில் மாட்டி கொண்டு செய்வதறியாது இருப்பவர்கள் வில்வ_இலை கொண்டு பூஜை செய்ய செல்வம் பெருகும்.

சமயங்களில் நம்மை அறியாமல் பிற மனிதனுடைய தூண்டுதலால் சில தவறுகள் தீய குணங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.அவ்வாறு தன்னுடைய தவறு தெளிந்து வருந்தி மோட்சம் தேடுபவர்கள் ஊமத்தை இலை கொண்டு பூஜை செய்ய தீய குணங்கள் நீங்கும்.

உலகத்தில் நிலையானது என்று எதுவும் இல்லை.இயற்கையின் பருவ மாற்றம் போல தான் மனிதனின் வாழ்க்கை .அவ்வாறு நிலையில்லாத வாழ்க்கையில் நல்ல வருமானமும் இனிய இல்லறமும் அமைய நெல்லி இலை கொண்டு பூஜை செய்ய இனிய வாழ்க்கை அமையும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் என்ன எண்ணம் நல்ல தோற்றம் கிடைக்க நாயுருவி இலை கொண்டு பூஜை செய்ய நல்ல வசீகரமான தோற்றம் கிடைக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று எந்த இலை பூக்கள் கொண்டு பூஜை செய்ய வேண்டும்? | Vinayagar Chathurthu Poojai Seiyum Murai

மனிதனுக்கு சிறந்த செல்வம் அவனின் ஆரோக்கியம் அப்படியாக துளசி இலை கொண்டு பூஜை செய்ய ஆரோக்கியம் மேம்படும். இப்படி ஒவ்வொரு இலைக்கும் ஒரு குறிப்பிட்ட பலன் உண்டு என்பதால் கிடைக்கும் இலைகளைக் கொண்டு 21 முறை கணபதியின் திருநாமங்களைச் சொல்லி சமர்ப்பிக்க வேண்டும்.

21 இலைகள் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதைத் தொடர்ந்து 21 முறை தூர்வாயுக்ம சமர்ப்பணமும் செய்து வழிபட வேண்டியது அவசியம். தூர்வா என்றால் அறுகம்புல். யுக்மம் என்றால் இரட்டை என்று பொருள்.

பொதுவாக அர்ச்சனையின்போது நாம் அருகம்புல்லை சாத்துவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி அன்று அறுகம்புலை இரண்டு இரண்டாக அறுகம்புற்களை எடுத்து கணநாதனின் நாமத்தைச் சொல்லி சாத்தி வழிபட துன்பங்கள் தீர்ந்து அற்புத பலன்களை பெறலாம்.

உங்கள் வீட்டில் எந்த பிள்ளையார் வைத்து வழிபட போகிறீர்கள்?

உங்கள் வீட்டில் எந்த பிள்ளையார் வைத்து வழிபட போகிறீர்கள்?


பொதுவாக அறுகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. வாழ்வில் தொடர்ந்து பிரச்னைகள், தொல்லைகள், கடன், வறுமை, ஆகியவற்றால் துன்புறுபவர்கள் விநாயக பெருமானுக்கு அறுகம்புல் சாத்தி வழிபட அவை படிப்படியாகக் குறைந்து மன அமைதி கிடைக்கும்.

அடுத்தபடியாக விநாயக பெருமானுக்கு உகந்த 21 மலர்கள் எருக்கம்பூ மற்றும் தும்பைப் பூ. புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி ஆகிய 21 மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

இவை அனைத்தும் கிடைத்தாலும் அவற்றைக்கொண்டு பூஜை செய்யலாம். பொதுவாக இதற்கான மந்திரங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், மந்திரங்கள் அறியாதவர்கள், கணபதியே போற்றி என்று 21 முறை சொல்லி அர்ச்சித்தாலே போதுமானது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



   

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US