எதிர்பார்த்த காரியம் நிறைவேற விநாயகர் காயத்ரி மந்திரம்

By Fathima Apr 08, 2024 08:20 AM GMT
Report

முழு முதற்கடவுள் விநாயகர், எந்தவொரு தெய்வ வழிபாட்டை தொடங்கினாலும் முதல் மரியாதை விநாயகருக்கு தான்.

நாம் மனதில் நினைத்த காரியம் சிறப்பாக நடைபெற தெய்வத்தின் அனுக்கிரகம் கண்டிப்பாக தேவை, தடைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள், தாமதமாகும் காரியங்கள் கூட தெய்வத்தின் பார்வையால் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த பதிவில் விநாயகரை வழிபடும் முறை குறித்து தெரிந்து கொள்வோம்.

விநாயகர் காயத்ரி மந்திரம்

அதிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டில் உள்ள விநாயருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் தொட்டு பொட்டு வைத்து அகல் விளக்கை ஏற்றிவிடுங்கள்.

எதிர்பார்த்த காரியம் நிறைவேற விநாயகர் காயத்ரி மந்திரம் | Vinayagar Valipadu In Tamil

அது நல்லெண்ணெய் தீபமாகவோ, நெய் தீபமாகவோ இருக்கலாம், இதனுடன் வெட்டிவேரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து அருகம்புல்லை சாற்றி விநாயகர் காயத்ரி மந்திரத்தை எட்டு முறையோ அல்லது 108 முறையோ சொல்லி வழிபடுங்கள்.

"ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்"

தொடர்ந்து ஏழு நாட்கள் இதை செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.

சூரிய கிரகணத்தின் போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம்

சூரிய கிரகணத்தின் போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம்


தொழில் வெற்றிக்கான மந்திரம்

திங்களன்று விநாயகரை வணங்கிவிட்டு, கீழ்க்கண்ட மந்திரத்தை உச்சரித்தால் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

” ஓம் ஷ்ரீம் கம் சவ்பாக்ய கணபதயே
வர்வார்த்த சர்வஜன்ம மெய்ன்
வஷாமன்ய நமஹ ”

என்ற மந்திரத்தை 108 முறை கூறவும்.

இறுதியாக விநாயகருக்கு தேங்காய் உடைத்து, அதன் சிறுபகுதியை பிரசாதமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வந்தாலே தொழில் விருத்தியடையும்.

எதிர்பார்த்த காரியம் நிறைவேற விநாயகர் காயத்ரி மந்திரம் | Vinayagar Valipadu In Tamil

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US