கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?
இந்த உலகத்தில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் பதிலடி உண்டு. அதன் பெயரை தான் நாம் கர்மா என்று சொல்கிறோம். அப்படியாக, கர்மாவின் 9 பதிலடி பற்றி பார்ப்போம்.
1. நாம் எதை விதைக்கின்றோமோ அதையே நாம் அறுவடை செய்கின்றோம். காலம் நெருங்கி வரும் பொழுது அதற்கான அறுவடை சரியாக நடக்கும்.
2. காலம் நமக்கு எப்பொழுதும் மெதுவாக நகர்வது போல் தெரியலாம். ஆனால் அதனுடைய கணக்கை சரியாக முடித்து விடும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

3. நம்மை ஒருவர் அழ வைத்திருக்கிறார்கள் என்றால் நாம் அழுத கண்ணீர் நம்மை அழ வைத்தவன் வாசலை தேடி செல்லும்.
4. கர்மாவிற்கு கண்கள் கிடையாது. ஆனால், அது யார் என்பதை அது நன்றாக தெரிந்து கொள்ளும். அதனால் எதையும் கண்டு துவண்டு போகாமல் நல்ல காலத்திற்காக நாம் காத்திருக்கலாம்.
5. இன்று நாம் பேசுகின்ற சொல் நாளை அதே சொல்லாக நம்மை வந்து சேரும்.
6. மற்றவர்களுடைய வாழ்க்கையை சிதைத்தால் நம்முடைய வாழ்க்கையை ஒருவன் சிதைப்பான் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.

7. மறதி என்பது மனிதனுக்கு மட்டும்தான் தவிர ஒரு பொழுதும் கர்மாவிற்கு கிடையாது.
8. நாம் செய்கின்ற தர்மம் நம்மை காக்கும். அதை போல் நமக்கு செய்த துரோகம் அவர்களை கட்டாயம் ஒரு நாள் தாக்கும்.
9. தவறு செய்தவனுக்கு கர்ம வினை வினையால் தண்டனை நிச்சயம் உண்டு. தப்பிக்கவே முடியாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |