ரத்தினங்கள் மூலம் முழு பலனை அடைவது எப்படி? தவறாக அணிந்தால் பாதிப்பு
நவரத்தினங்கள் அணிவதால் எப்படி முழு பலனைப் பெறலாம்?
நவரத்தின பலன்கள்
மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகியன நவரத்தினங்கள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றை அணிவதன் மூலம் கிரகங்களின் எதிர்மறை பாதிப்புகள், வேலைத் தடைகள், பெண் திருமண தாமதம், குழந்தை இல்லாமை, நிதி நெருக்கடி, குடும்ப முரண்பாடுகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஜோதிடர்கள் கூற்றுப்படி நல்ல நாள், நல்ல நேரம், நட்சத்திரம், சுப ஹோரை ஆகியவற்றை அடிப்படையில் கொண்டு ரத்தினங்கள் ஒருவர் அணிய வேண்டும். மேலும், தூய்மையான மற்றும் சுத்தமான ரத்தினங்களை மட்டுமே வாங்கி அணியவும். உடைந்த, பழுதுபட்ட ரத்தினத்தை அணியக்கூடாது.
குறிப்பாக அணிந்திருக்க கூடிய ரத்தின மோதிரத்தை அடிக்கடி கழற்றி வைப்பதால் உங்களுக்கு அசுபயோகங்கள், வீண் பண செலவு ஏற்படும்.
ரூபி அல்லது மானிக்
செல்வம், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை மற்றும் வசீகரமான ஆளுமையை தருகிறது. தலைவிதியை பலப்படுத்துகிறது.
வெள்ளை சபையர் அல்லது சஃபேட் புக்ராஜ்
வெள்ளை நீலக்கல்லை அணிவதன் மூலம் காதல் மற்றும் புரிதல் மிக்க உறவை அடைய முடியும். இது ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும் அவசியமாக கருதப்படுகிறது.
முத்து அல்லது மோதி
இந்த ரத்தினக் கல் முகம் மற்றும் கண்கள் உள்ளிட்ட வெளிப்புற அழகை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மன அமைதி, உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் சமநிலையான மனநிலையையும் மேம்படுத்துகிறது.
வைரம் அல்லது ஹீரா
தீய மற்றும் பயமுறுத்தும் எண்ணங்களை நீக்குகிறது. ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை மற்றும் நல்ல சமூக அந்தஸ்தை வழங்குகிறது.
ஹெசோனைட் அல்லது கோமேட்
தேவையற்ற பிரச்சனைகள் மற்றும் பதட்டங்களைக் குறைக்கிறது. இது அணிபவர் தொழில் மற்றும் அரசியலில் சிறந்து விளங்க உதவுகிறது.
பவளம் அல்லது மூங்கா
தைரியம், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலை ஊக்குவிக்கிறது. இந்தக் கல்லை அணிபவர்கள் தந்திரம் மற்றும் தீய சக்திகளின் விளைவுகளை எளிதில் எதிர்த்துப் போராட முடியும்.
தனித்துவமான மற்றும் தங்களது நட்சத்திரங்களுக்கு ஏற்ப ரத்தினத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.