உங்கள் கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கனவு என்பது நம்முடைய ஆழ் மனதின் தொடர்பு என்றாலும் சில சமயங்களில் நம்முடைய எதிர்காலத்தை குறிக்கக் கூடியதாகவும் அவை அமைகிறது. கனவில் நாம் நிறைய வித்தியாசமான விஷயங்களை காணலாம்.
அன்றைய பொழுதில் நாம் நினைக்காத மற்றும் சிந்திக்காத பல விஷயங்களையும் கனவு பார்ப்பது இயல்பாக இருக்கிறது. அப்படியாக நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கு பின்னாலும் ஆன்மீகம் மற்றும் அறிவியல் ரீதியாக நிறைய காரணங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்த வகையில் ஒருவருடைய கனவில் பாம்பு வருகிறது என்றால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம்.

உங்களுடைய கனவில் பாம்பு வருகிறது என்றால் அது ஒரு ஆன்மீகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. சமயங்களில் அவை உங்களின் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் உங்களுடைய ஆன்மீக சிந்தனையை தூண்டுவதற்கான அறிகுறியாகவும் அது இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் உங்களுடைய கடந்த கால கர்ம வினைகள் மற்றும் பாவங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான அறிகுறியாகவும் அமைகிறது. மேலும், பாம்பு கனவில் வருகின்ற சமயத்தில் ஒவ்வொரு கலாச்சாரம் ரீதியாகவும் பல்வேறு அறிகுறியாக பின்பற்றப்படுகிறது.
அந்த வகையில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் பாம்பு அவர்களுடைய தோலை உதிர்ப்பது போல் கனவு வந்தால் அந்த மனிதருக்கு ஒரு மறுபிறவியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த சமயங்களில் அவர்களுடைய தீய பழக்கங்களை விடுவித்து அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அவர்கள் ஓட வேண்டும் என்பதின் அறிகுறியாக இருக்கிறது.
அதுபோல் இந்து மதத்தில் அவை நம்முடைய ஆன்ம சக்கரங்களை வலுப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும், பாம்பு துரத்துவது போல் கனவு வந்தால் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |